SMART CITY ஊழலை மூடி மறைக்கவே இந்த வேலை; போலீஸிடம் தாராளமாக புகார் தரலாம்; BJP மீது பாயும் திமுக MLA
சென்னை: சென்னை தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழலை மூடி மறைக்க அதிமுகவும் பாஜகவும் கூட்டு வைத்து பிரச்சனையை திசை திருப்பி வருவதாக திமுக எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை தி.நகர் பகுதி வியாபாரிகளிடம் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதியின் ஆட்கள் வசூல்வேட்டையில் ஈடுபடுவதாக பாஜக பரபரப்பு புகார் ஒன்றை முன் வைத்திருக்கிறது.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியிட்ட நாம், குற்றஞ்சாட்டப்படும் தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதியிடம் விளக்கம் அறிவதற்காக பேசினோம்.
அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு;

ஸ்மார்ட் சிட்டி
''தி.நகர் பகுதி வியாபாரிகளிடம் எனது பெயரை பயன்படுத்தி வசூல்வேட்டை நடத்தப்படுவதாக கூறுவது கற்பனையே தவிர உண்மையில்லை. திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய வழியில்லாமல் தவித்து வரும் பாஜக இது போன்ற பொய் தகவல்களை பிரசங்கம் செய்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழலை வெளிக்கொண்டு வருவோம் என எங்கள் தலைவர் கூறியுள்ள நிலையில், அதை மடைமாற்றும் நோக்கில் புதிய பிரச்சனைகளை உருவாக்குகின்றனர்.''

கூட்டு வைத்து
''அதிமுகவும் பாஜகவும் கூட்டு வைத்துக்கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழலை மூடி மறைக்க முயற்சிக்கிறது. அதனால் தான் ஆளுங்கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்து வருகின்றனர். தி.நகர் வியாபாரிகளிடம் எனது பெயரை கூறி வசூல் செய்வதாக கூறப்படுவது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு.''

புகார் தரலாம்
''எனது பெயரைக் கூறி பணம் கேட்பவர்கள் மீது தாராளமாக போலீஸில் புகார் அளிக்கலாம். கட்சி பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்குமாறு நானே காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளேன். அப்படியிருக்கும் போது நான் எதற்கு இது போன்ற கீழ்தரமான வேலைகளில் ஈடுபடப் போகிறேன். இது பிஸினஸ்ஜோன் சார், அப்படியெல்லாம் போய் யாரும் ஈஸியாக பணம் வசூலிக்கமுடியாது. தி.நகர் பகுதியில் நடக்காத ஒரு சம்பவத்தை நடப்பது போல் சித்தரித்து அதிமுகவும் பாஜகவும் பொய்ச்செய்திகளை பரப்பி வருகின்றன'' என தனது தரப்பு விளக்கத்தை ஜெ.கருணாநிதி ஒன் இந்தியா தமிழ் மூலம் பகிர்ந்துகொண்டார்.

2 முக்கியம்
தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அளித்த விளக்கத்தில் இரண்டு விவகாரங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஒன்று தனது பெயரைக் கூறிக்கொண்டு பணம் கேட்டு வருபவர்கள் மீது வியாபாரிகள் போலீஸில் புகார் அளிக்கலாம் என்பது, மற்றொன்று ஸ்மார்ட் சிட்டி ஊழலில் அதிமுக-பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கூட்டும் இருக்கிறது என்பதுமாகும்.
-
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications