மெடிக்கல் ஷாப்புக்கு போன குமார்.. உட்கார வைத்து ஊசி போட்ட கடை ஓனர்.. பரிதாபமாக போன உயிர்!
மெடிக்கல் ஷாப்பில் தவறான ஊசி போட்டு டெய்லர் பரிதாப பலியானார்
Recommended Video
சென்னை: தோள்பட்டை வலிக்கு மெடிக்கல் ஷாப்புக்கு போன குமாருக்கு, அங்கேயே ஊசி போட்ட கொடுமையால் வாயில் நுரை தள்ளியே இறந்துவிட்டார்.
அம்பத்தூர் அடுத்த மாதனாங்குப்பத்தை சேர்ந்தவர் குமார். இவர் ஒரு டைலர். கல்யாணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

4 மாசமாக முதுகுவலி இவருக்கு இருந்து வந்துள்ளது. அதனால் சூரப்பட்டில் உள்ள ஸ்ரீசக்தி மெடிக்கல்ஸ் என்ற மெடிக்கல் ஷாப்புக்கு அடிக்கடி குமார் போவார்.
இங்கு மருந்துமட்டுமில்லை, நோயாளிகளை அங்கேயே உட்கார வைத்து மெடிக்கல் ஷாப் ஓனர் குமார் ஊசியே போட்டு அனுப்புவாராம். இப்படி அடிக்கடி குமார் ஊசி போட்டு கொண்டு வந்துள்ளார்.
நேற்று ராத்திரியும் ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்பினார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு வலிப்பு வந்துவிட்டது. திடீரென மயங்கி விழுந்த அவரை புழலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வீட்டில் இருந்தவர்கள் தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் குமார் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.
தப்பான ஊசியை போட்டு குமாரை கொன்றுவிட்டதாக, மெடிக்கல் ஷாப் ஓனர் பாஸ்கர் மீது அம்பத்தூர் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரும், மெடிக்கல் ஷாப்புக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதான், அந்த மெடிக்கல் ஷாப்புக்கு லைசென்ஸே கிடையாது என்று தெரிய வந்துள்ளது.
இதில் சட்டவிரோதமாக நோயாளிகளுக்கு ஊசி போட்ட பாஸ்கர், பிளஸ் டூ வரைதான் படித்திருக்கிறாராம். இதையடுத்து, போலீசார் பாஸ்கரை போலீசார் கைது செய்து, குமாருக்கு என்ன ஊசி போட்டார் என்று விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications