வேலையை காட்டிய ’முருகன்’ லாக் ஆன நயினார்..நெல்லைக்கே பறக்கும் முக்கிய ஆர்டர்! யாரந்த சொந்தக்காரர்?
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார் பாஜக எம்.எல்.ஏ.வும், நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன். இந்நிலையில் அவர் கொடுத்த விளக்கத்தில் குழப்பம் இருப்பதால் 2வது சம்மனை அவரது நெல்லை வீட்டுக்கே நேரில் சென்று அளிக்கவுள்ளனர் தாம்பரம் போலீசார்..
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்றதோடு, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 640 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது இந்திய அளவில் 3வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணம் பறிமுதல்: இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடும் கண்காணிப்பு இருந்த போது, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
நயினார் நாகேந்திரன்: அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
பறக்கும் படையினர் சோதனை: இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
நயினாருக்கு சம்மன்: இந்நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. நேற்று முன் தினமே ஆஜராக வேண்டுமென சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மூலம் விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தற்காலிக தீர்வு கிடைத்ததாகவும், அதற்குள் வேறு முடிவுகளை எடுக்கலாம் என நயினார் தரப்பு திட்டமிட்டிருந்தது.
மற்றொரு சிக்கல்: இந்நிலையில் அதற்கு முட்டுக் கட்டை போடும் விதமாக மற்றொரு சிக்கல் நயினார் நாகேந்திரன் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது நேற்று வழக்கு தொடர்பாக ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி தாம்பரம் போலீசாரிடம் விளக்கம் அளித்தனர். அதில் முருகன் அளித்த வாக்குமூலத்தில்,"எனக்கும் இந்த பணத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் பணம் எடுத்து வரும் நபர்களுக்கு பாதுகாப்பிற்காக தாம்பரம் ரயில்நிலையத்திற்கு இரண்டு ஆட்களை அனுப்பி வைக்குமாறு கேட்டார். இதனால்தான் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரை ரயில்நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன்" என கூறியுள்ளார்.
பின்னணி என்ன?: இந்த நிலையில் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டபோது நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல் நிலையத்தில் அவகாசம் கேட்ட வழக்கறிஞர் அளித்த விளக்கத்தில் அந்த பணத்திற்கும் தொடர்பு இல்லை எனவும் உறவினர் ஒருவருக்காக அந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் ஆஜராவார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு விளக்கங்களுக்கும் முரண்பாடுகள் இருப்பதால் நயினார் நாகேந்திரனுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்ப காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தாம்பரம் போலீசார் இன்று நெல்லையில் உள்ள நயினார் நாகேந்திரனின் வீட்டுக்கே நேரில் சென்று சம்மனை வழங்க உள்ளனர். அதில் ஒரு வாரத்திற்குள் நயினார் நாகேந்திரன் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
நெல்லையில் போட்டியிடாதது ஏன்? "அதிமுக கேட்டாங்க! விட்டுக் கொடுத்துட்டோம்!" நயினார் நாகேந்திரன் -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை












Click it and Unblock the Notifications