ரவுடிகளை மாஸ் ஹீரோவாக காட்டும் திரைப்படங்களால் சமூகத்துக்கு ஆபத்து- எப்போது உணரும் திரை உலகம்
சென்னை: தமிழ்சினிமா உள்ளிட்ட இந்திய சினிமாக்களில் பல திரைப்படங்கள் உருவாகின்றன. அதில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை, தங்கள் கதைகளின் மையமாக ரவுடி ஹீரோக்களையும், அவர்களை யார் எதிர்த்து நின்றாலும் பயந்து நடுங்கும் காவல்துறையையும் கொண்டு உருவாக்கப்படுகிறது. இவை மட்டும் அல்லாமல், இன்றைய ஹீரோக்கள் தங்கள் "ரவுடி பிம்பத்தால்" சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி வருகின்றனர்.
சினிமா மற்றும் சமூகத்துடனான பொறுப்பின்மை
இந்தப் படங்களின் வழியாக, ஒரு நாயகன் எப்படி சட்டத்தையும் ஒழுங்கையும் தாண்டி செல்லலாம், சமூகத்தின் நடைமுறைகளை திருத்தி அமைக்கலாம் என்பதையும் பயங்கரமாக காட்டப்படுகிறது.

அது போக அந்த ரவுடி நாயகன் கல்லுரியில் படிக்கும் ஒரு பொண்ணை துரத்தி துரத்தி காதலிப்பது போலவும், அந்த பொண்ணும் பயந்து போய் இவனை காதலிப்பது போலவும் எதார்த்தத்தை மீறிய பொறுப்பற்ற காட்சிகளை உருவாக்கி விடுகின்றனர். இதை பார்க்கும் இளைய தலைமுறையின் மனதில் இவர்களே நஞ்சை கலக்குகிறார்கள் .
இப்படி படம் எடுக்கும் தயாரிப்பாளர், இயக்குனர், படத்தில் நடிக்கும் நாயகன் வீட்டில் இவர்களின் பெண்ணை ஒரு ரௌடிக்கு திருமணம் செய்து வைப்பார்களா, அப்படி உங்களால் முடியும் என்றால் இந்த மாதிரி படங்களை தாராளமாக எடுங்கள் என்கின்றனர் பொதுமக்கள்.
ஒரு படம் மூலம் கொடுக்கும் கருத்துக்கள் மற்றும் அதன் விளைவுகளைத் திரைத்துறையினர் யார் கவனிக்கின்றனர்? இப்படிக் காட்சிகள் உருவாக்கும் போது, தயாரிப்பாளரும், இயக்குனரும், ஹீரோவும் தங்கள் சொந்த குடும்பத்தில் இதையே அனுபவிக்கச் செய்ய முடியுமா என்ற கேள்வி நியாயமாக எழுகிறது.
சொகுசான வாழ்க்கை மற்றும் சமூகத்தின் வேதனை
திரையுலக பிரபலங்கள் மக்களின் மனதில் தோன்றும் கேள்விகளைப் பற்றிய சிந்தனை இன்றி, அவர்கள் படங்களை எடுத்து பெரும் லாபங்களை அடைகின்றனர். ஆனால், அந்த காட்சிகளை அப்படியே நிஜ வாழ்வில் கடைபிடிக்க முயற்சிக்கும் சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்படும் பாதகங்களை யார் சரி செய்வது?
பொறுப்பற்ற திரைப்படங்களின் தாக்கம்
சினிமா என்பது பொழுதுபோக்குக்கான ஒரு கருவியாக இருக்க வேண்டும். ஆனால், சினிமாவின் பொறுப்பில்லாத காட்சிகள் உண்மையை மீறி இளைய தலைமுறையை தவறான பாதையில் அழைத்து செல்கின்றன.
இன்றைய தலைமுறை திரையில் காணும் கதாபாத்திரங்களை எளிதில் உள்வாங்கவும் அவற்றை தங்கள் வாழ்க்கையின் மையமாகக் கருதவும் செய்கின்றனர். குறிப்பாக, ரௌடியாக சித்தரிக்கப்படும் நாயகர்களை முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்வது ஒரு ஆபத்தான சமூகத் தாக்கத்தை உருவாக்குகிறது.
திரையரங்குகளின் தாக்கம்
திரையில் பெருமைப்படுத்தப்படும் ரௌடி கதாபாத்திரங்கள், சமூகத்தில் ஒரு வெகுசனக் கலாச்சாரத்தை உருவாக்குகின்றன. இளைய தலைமுறை, குறிப்பாக மாணவர்கள், இத்தகைய காட்சிகளை மனதில் ஊடுருவி, தவறான பாதையில் தங்களை கொண்டு செல்கின்றனர். அவர்களின் வாழ்வில் உண்மையான வழிகாட்டுதல்களும் நியாயமான கனவுகளும் மறைக்கப்பட்டு, ஒரு போலி நாயகத்துவத்தை அடைய முயல்கின்றனர்.
சினிமாவில் ரவுடி ஹீரோக்கள் கேங்ஸ்டர் வேடங்களில் காட்சியளிப்பது, மக்களிடையே திரைக்கதை வெற்றி பெறும் நோக்கத்திலேயே. ஆனால், இது சமூகத்தில் தீமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ரவுடிகள் தங்களை ஹீரோக்களாகவே கற்பனை செய்து, அவர்களின் செயல்களை நியாயப்படுத்துகிறார்கள். இந்த மனநிலை, சில நேரங்களில், சினிமா பாதிப்பால் உருவாகிறது. குறிப்பாக, வன்முறை மற்றும் சீர்கேடுகளுக்கான அவதாரமாக சில கேங்ஸ்டர் கதாபாத்திரங்கள் முன்வைக்கப்படுவதால், இளைய தலைமுறையினர் தவறான வழிகளில் ஈடுபடுவதற்கான ஈர்ப்பை பெறுகின்றனர்.
பெண்களுக்கான பாதுகாப்பில் விரிசல்
திரையில், பெண்களை துரத்துவது, அச்சுறுத்துவது, மற்றும் அனுமதி இல்லாமல் காதல் வெல்லும் காட்சிகள் வழக்கமாக மெருகேற்றப்படுகின்றன. இதனால், பெண்கள் நிஜ வாழ்க்கையில் பொதுநிலையிலேயே அச்சம் அல்லது சங்கடத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலைகள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, பெண்களின் கல்வி, தொழில், மற்றும் வாழ்க்கை தரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
இருந்தாலும், இதனை மாற்றுவதற்கு திரைத்துறையில் உள்ளவர்கள் தங்களின் பொறுப்பை உணர வேண்டும். கதைகளை உருவாக்கும்போது நிஜ வாழ்வில் அதன் தாக்கத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தை சரியான பாதைக்கு வழிநடத்த வேண்டியது முக்கியம்.
திரைப்படங்கள் மக்களின் சிந்தனை முறையை மாற்றும் ஆற்றல் கொண்டவை என்பதால், திரையுலகப் பிரபலங்கள் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சினிமா ஒரு மாய பிம்பமாக இருந்தாலும், அதன் தாக்கம் நிஜமானது. திரைத்துறையினர் தங்கள் பொறுப்பை உணர்ந்து, சமூகத்தில் நன்மையை வளர்க்கும் கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது திரையுலகத்தின் நல்லிணக்கத்திற்கும், நமது சமூதாய வளர்ச்சிக்கும் முக்கியம். புகைமதுப் பழக்கங்களையும் குறைத்து, விறுவிறுப்பான முறையில் நேர்மறை கதைகளைச் சொல்ல வேண்டும்.
திரைப்படங்கள் என்பவை மக்களின் சிந்தனை முறையை மாற்றும் ஆற்றல் கொண்டவை என்பதால், திரையுலகப் பிரபலங்கள் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications