ஐரோப்பா வரை ஆராய்ச்சி! தமிழ் மொழிக்காக பிடிஆர் வெளியிட்ட சிறப்பான அறிவிப்பு! ஏன் முக்கியம் தெரியுமா?
சென்னை: தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய நிதி ஒதுக்குவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.
இந்த பட்ஜெட் உரையில் தமிழ் மொழி மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சி பணிகளுக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியானது.

தமிழ் ஒதுக்கீடு
நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 10 சதவிகிதம் உள்ளது. இந்த பட்ஜெட்டில், தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கொற்கையில் 5 கோடி ரூபாயில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும். புதிய நூலகங்கள் அமைக்க 125 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

இலக்கிய திருவிழா
இலக்கிய திருவிழா நடத்த 5.6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அரசு சாரா பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.

தமிழ் மொழி
தமிழ் மொழிக்கும் பிற சர்வதேச மொழிக்கும் இடையில் உள்ள தொடர்பை கண்டறிய 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும். எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று தமிழ் மொழியைப் போற்றி, அதனை உலகெங்கும் பரவச் செய்வதே இந்த அரசின் தலையாய குறிக்கோளாகும். தமிழ்மொழியின்
தொன்மையையும்செம்மையையும் நிலைநாட்டிட வேண்டும்.

பிற மொழி
இதற்காக பிற உலக மொழிகளுடன் தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவது அவசியமாகும். மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில்,தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக,இந்த ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications