மத்திய பாஜக அரசுக்கு சவால்-சிபிஐ-க்கு எதிராக முஷ்டி உயர்த்திய 10-வது மாநிலமாக தமிழ்நாடு விஸ்வரூபம்!
சென்னை: மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள சிபிஐ - மத்திய புலனாய்வுத் துறை இனி விசாரணைகள் நடத்த வேண்டும் எனில் தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. சிபிஐக்கு செக் வைத்திருக்கும் 10-வது மாநிலமாக தமிழ்நாடு இணைந்துள்ளது.
சிபிஐ எனும் மத்திய புலனாய்வுத் துறை அமைப்பானது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சுதந்திரமாக எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில்தான் இத்தகைய விசாரணைகளை அரசியல் பழிவாங்கலுக்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது என்பது மாநில அரசுகளின் குற்றச்சாட்டு.

இதனால் பல மாநிலங்கள் தங்களது அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது என அறிவித்து ஆணைகள் பிறப்பித்துள்ளன. அதாவது சிபிஐ சுதந்திரமாக விசாரணை நடத்த கொடுத்திருந்த ஒப்புதலை மாநில அரசுகள் திரும்பப் பெற்றிருக்கின்றன.
ஆகிய 9 மாநிலங்கள் சிபிஐக்கு கொடுத்திருந்த் அனுமதியை திரும்பப் பெற்று இனி மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே சிபிஐ விசாரிக்க முடியும் என ஆணை வெளியிட்டது.
சிபிஐக்கு ஏன் கட்டுப்பாடு?: சிபிஐ என்பது டெல்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டம் 1946 பிரிவு 6-இன் கீழ் உருவாக்கப்பட்டது. அதாவது டெல்லி யூனியன் பிரதேச எல்லைக்குள் சிபிஐ சுதந்திரமாக செயல்படலாம். அதற்காக அனுமதியை இந்த சட்டப் பிரிவு வழங்குகிறது. ஆனால் இந்த எல்லைகளுக்கு அப்பால், பிற மாநிலங்களுக்குள் சிபிஐ அமைப்பு விசாரணை நடத்த அந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒப்புதல் தேவை. இத்தகைய ஒப்புதல்களை ஏற்கனவே மாநில அரசுகள் வழங்கி இருந்தன. அதனால் சிபிஐ சுதந்திரமாக எந்த மாநிலத்துக்குள்ளும் நுழைந்து விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிபிஐ அமைப்பை அரசியல் பழிவாங்கலுக்காக எதிர்க்கட்சிகளை இலக்கு வைத்து பயன்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து கேரளா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே சிபிஐக்கு கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றன.
தற்போது தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் இந்த மாநிலங்களின் பட்டியலில் 10-வதாக இணைந்துள்ளது. தமிழ்நாட்டில் சிபிஐ விசாரிக்க இதுவரை தரப்பட்ட ஒப்புதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது; இனி சிபிஐ தமிழ்நாட்டில் விசாரிக்க வேண்டும் எனில் மாநில அரசின் ஒப்புதல் அவசியம் என்கிறது இந்த புதிய ஆணை.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications