அடித்து பறக்கவிட்ட அரசுப் பள்ளிகள்.. +2 ரிசல்ட்டில் மாஸ் காட்டிய மாணவர்கள்! சென்டம் அடிச்சுட்டாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வழக்கத்தை போலவே மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதே நேரத்தில் அரசு பள்ளிகளும் பொதுத்தேர்வு முடிவுகளின்படி பல சாதனைகள் படைத்துள்ளன. குறிப்பாக நூற்றுக்கு நூறு தேர்ச்சி உள்ளிட்ட மகத்தான சாதனைகளை அரசு பள்ளி மாணவ மாணவிகள் படைத்துள்ளனர்.

2024- 2025ஆம் கல்வி ஆண்டுக்கான +2 பொதுத் தேர்வினை தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 3 முதல் 25 வரை நடைபெற்றன. தமிழகம் முழுவதும் 7518 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள். மொத்தம் 3 இலட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 இலட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும் தேர்வெழுதினர்.

மேலும் 18,344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசி தேர்வர்கள் என மொத்தமாக தமிழகம் முழுவதும் 8 இலட்சத்து 21 ஆயிரத்து 057 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு தேர்வு மார்ச் 25ஆம் தேதி முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 80க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில் நடைபெற்றது.

chennai department of education plus 2

ஏப்ரல் ஒன்றாம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் 15ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் எனவும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் மதிப்பெண் சரிபார்த்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்பாகவே இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 95.03 சதவீதமாக உள்ளது. அதாவது 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரித்துள்ளது. கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 94.56% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கின்றனர். இந்தாண்டு அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 91.94% ஆக உள்ளது. அதேபோல அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சியில் ஐந்து மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. அரியலூரில் 98.32%, ஈரோட்டில் 96.88%, திருப்பூரில் 95.64%, கன்னியாகுமரியில் 95.6 %, கடலூரில் 94.99 % மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சியிலும், அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்திருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள மொத்தம் 7513 மேல்நிலைப் பள்ளிகளில் 2638 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 436 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகள் 100% தேர்ச்சியை பெற்று இருக்கின்றனர். அதேபோல ஏதேனும் ஒரு பாடத்தில் 100% மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2853 ஆக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+