+2 ரிசல்ட்..மாஸ் காட்டிய மாற்றுத் திறனாளிகள்! சிறைவாசிகள் சிறப்பான சம்பவம்! தனித் தேர்வர்கள் பாவம்!
சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் நடத்தப்பட்ட பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வில் மாற்றுத் திறனாளிகள், சிறைவாசிகள், தனித் தேர்வர்கள் ஆகியோரது தேர்ச்சி முடிவுகள் குறித்து பார்க்கலாம்..
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.
சென்னை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இந்த தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in என்ற இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்..

தமிழ்நாடு முழுவதும் 7,92,494 மாணவ மாணவிகள் உள்ளிட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். அந்த வகையில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 ஆக உள்ளது. இது 95.3 சதவீதமாகும். மொத்தம் நான்கு லட்சத்து 5,472 மாணவ மாணவிகளும். மூன்று லட்சத்து 47 ஆயிரத்து 670 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர்கள் கூடுதலாக மூன்று சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் 10,49 பேர் தேர்வு எழுத வரவில்லை என கூறப்படுகிறது. மொத்தம் 7513 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 2638 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. அரசு பள்ளிகளை பொருத்தவரை 436 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்று இருக்கின்றன.
மாணவர்கள் தவிர்த்து சிறைவாசிகள், தனி தேர்வர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வினை 8219 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதிய நிலையில் 70,46 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 93.10 சதவீதமாக உள்ளது.
இந்த ஆண்டு 140 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில் 130 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த தேர்ச்சி சதவீதம் 92.86 ஆக உள்ளது. தனித்தேர்வுகளில் 16 ஆயிரத்து 904 பேர் தேர்வு எழுதிய நிலையில் 5500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று சதவீதம் வெறும் 32.54 சதவீதமாக உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications