தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை! உங்க ஊர் இருக்கா? சென்னை நிலவரம் இதுதான்! மீனவர்களே உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், அடுத்த 48 மணிநேரத்தில் சென்னை வானிலை எப்படி இருக்கும் என்பது பற்றியும் முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கத்தரி வெயிலின் கோர பிடியில் இருந்து மக்கள் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில நாட்கள் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோக்கா புயல் வங்கக்கடலில் மோக்கா புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் 9ம் தேதிக்குள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வரும் 8ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்..
இதன்காரணமாக தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி பகுதகிளில் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 18 மாவட்டங்கள் , காரைக்கல் பகுதிகிளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் வரும் 10ம் தேதி வரை தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொறுத்தமட்டில் வரும் நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி காலநிலையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பநிலையை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
மீனவர்களை பொறுத்தமட்டில் இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக 11ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், நாளைய தினம் ஆழ்கடல் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.. மத்திய அரசு செய்வது சதி.. ப சிதம்பரம் -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
தமிழகத்தில் உக்கிரம் காட்டிய வெயில்.. இன்று மட்டும் 13 இடங்களில் சதம்! அதிகபட்சம் எங்கேன்னு பாருங்க -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications