வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை... தமிழகம் 2-வது இடம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் என்ற தகவல் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தில் இருந்து தெரியவந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பொய்மலை தகர்ந்துவிட்டதாக அவர் சாடியுள்ளார்.
வேலைவாய்ப்பு பெருகிவிட்டது, அந்நிய முதலீடுகளை ஈர்த்துவிட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

தற்கொலை
இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையை விட வேலையில்லாப் பட்டதாரிகளின் தற்கொலை அதிகரித்துள்ளதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இப்படி தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் அகில இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கேள்வி
தொழில் பெருகிவிட்டது, வேலைவாய்ப்பு பெருகிவிட்டது, அந்நிய முதலீடுகளை ஈர்த்துவிட்டோம் என்ற எடப்பாடி அரசின் பொய் மலை தகர்ந்துவிட்டதாகவும், மத்திய அரசு விருது பெற்றதாக மகிழ்ந்த முதல்வர், மத்திய அரசின் இந்தப் புள்ளி விவரம் பார்த்து முகத்தை எந்தப் பக்கம் வைத்துக் கொள்வார்? என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார்.

முதலீட்டாளர்கள்
இதனிடையே மூதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் சந்திப்புகள் மூலம் தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டால் வேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை விகிதம் கணிசமாக குறையக்கூடும்.

திறமை
பட்டதாரி என்ற ஒரு அடிப்படையை மட்டுமே வைத்து வேலை வழங்கும் நிலைமை இப்போது மாறியுள்ளது. ஒவ்வொரு பட்டதாரிக்கும் சுயதிறன் உள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அலுவலக பணிகளாக இருந்தாலும் சரி வேலைவாய்ப்பு தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications