தமிழகத்தில் ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா.. சென்னையை விட பிற பகுதிகளில் 3 மடங்கு அதிக பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: : தமிழகத்தில் இன்று, 4985 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 70 பேர் பலியாகியுள்ளனர். எனவே, கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 2551 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்தது.

குணமடைந்தோர்
கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,861 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1,21,776 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

சென்னை நிலவரம்
சென்னையில் இன்று 1,298 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் 1,269 பேர் குணமடைந்தனர். மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு - 87,235 என்ற அளவில் உள்ளது. சென்னையில் குணமடைந்தவர்கள்- 70,651 பேர். சிகிச்சையில் உள்ளவர்கள் - 15,127. சென்னையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1456.

பிற மாவட்ட நிலவரம்
சென்னையில் தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,687 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதாவது சென்னையைவிட பிற மாவட்டங்களில் மூன்று மடங்கு அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.

பிற மாவட்டங்கள்
சென்னைக்கு அடுத்ததாக, அதிகளவாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 454 பேர், செங்கல்பட்டில் 354 பேர், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 52,087 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 19,84,579 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications