சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா.. சென்னையை விட பிற பகுதிகளில் 3 மடங்கு அதிக பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: : தமிழகத்தில் இன்று, 4985 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 70 பேர் பலியாகியுள்ளனர். எனவே, கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 2551 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்தது.

கொரோனா நோயாளிக்கு ஃபெரிட்டின் அதிகரிக்க கூடாதுதான்.. ஆனா குறைக்க இயற்கை மருத்துவம் இருக்கே.. Dr தீபாகொரோனா நோயாளிக்கு ஃபெரிட்டின் அதிகரிக்க கூடாதுதான்.. ஆனா குறைக்க இயற்கை மருத்துவம் இருக்கே.. Dr தீபா

குணமடைந்தோர்

குணமடைந்தோர்

கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,861 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1,21,776 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

சென்னை நிலவரம்

சென்னை நிலவரம்

சென்னையில் இன்று 1,298 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் 1,269 பேர் குணமடைந்தனர். மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு - 87,235 என்ற அளவில் உள்ளது. சென்னையில் குணமடைந்தவர்கள்- 70,651 பேர். சிகிச்சையில் உள்ளவர்கள் - 15,127. சென்னையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1456.

பிற மாவட்ட நிலவரம்

பிற மாவட்ட நிலவரம்

சென்னையில் தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,687 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதாவது சென்னையைவிட பிற மாவட்டங்களில் மூன்று மடங்கு அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.

பிற மாவட்டங்கள்

பிற மாவட்டங்கள்

சென்னைக்கு அடுத்ததாக, அதிகளவாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 454 பேர், செங்கல்பட்டில் 354 பேர், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 52,087 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 19,84,579 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

English summary
In Tamil Nadu, an unprecedented number of 4985 cases of coronavirus infection have been reported in a single day. Corona infection has been confirmed in 1298 people in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X