மாறிய ஆட்சி.. தமிழக தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் ராஜினாமா! புதிய அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம்?
சென்னை: தமிழக தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது.
அதிமுக ஆட்சி தோல்வி அடைந்து மீண்டும் இப்போது திமுக ஆட்சிக்கு வர உ ள்ள நிலையில் தமிழகத்தினுடைய தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.
நேற்றைய தேதியிட்டு ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார். இது ஏற்கப்படும் எனத் தெரிகிறது. தலைமை வழக்கறிஞர் பதவி மிக முக்கியமானதாகும். தமிழகம் சார்ந்த சட்டரீதியாக உள்ள அத்தனை முக்கிய விஷயங்களும் தலைமை வழக்கறிஞர் கவனத்திற்கு எடுத்து செல்லும் அரசு. மேலும் அவரின் சட்ட ஆலோசனைகளை பெறுவார் முதல்வர்.
கொரோனா தொற்று ஏற்பட்டால் எப்படி நிர்வகிப்பது? வீட்டு தனிமையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை என்ன?
திமுகவைப் பொறுத்தவரை நிறைய மூத்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அதில் சண்முக சுந்தரம் ஒரு சீனியராவார். ஏற்கெனவே திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம்.