Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை வரும் 5 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்துவிட்டது. அனல் கக்கும் வெயிலுக்கு நடுவே சூடுபறக்க பிரசாரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி விட்டார்கள்.

Tamil Nadu Assembly Election 2026 Nomination filing Election Commission 2026


4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது. 8 நாட்கள் மொத்தம் அவகாசம் இருந்தாலும் இடையில் 4 நாட்கல் விடுமுறை தினம் வருகின்றன.

எனவே மொத்தமே 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். மார்ச் 31 ஆம் தேதியான நாளை மகாவீர் ஜெயந்தி என்பதால் விடுமுறையாகும். ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கி முழு வருட கணக்கு முடிவு, ஏப்ரல் 3 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழை என மொத்தம் 4 நாட்கள் விடுமுறை நாட்களிலேயே கழிந்துவிடுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளருக்கு

எனவே, இன்று (திங்கள் கிழமை, வரும் ஏப்ரல் 2, 4, 6 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும். சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை சமர்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம் வாயிலாகவும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளருக்கு ஒருவரும், பிற வேட்பாளர்களுக்கு 10 பேரும் வேட்பு மனுவை முன்மொழிய வேண்டும். முன்மொழியும் நபர்கள் அந்த தொகுதியில் வாக்காளர்களாக இருக்க வேண்டும். வேட்பாளர் எந்த தொகுதியை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

5 பேர்கள் மட்டுமே அனுமதி

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உள்பட 5 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாரக்ள். தலைநகர் சென்னையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 16 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+