தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலேயே வர வாய்ப்பு.. ப சிதம்பரம் பரபர பேட்டி
சென்னை: பிப்ரவரி மாதமே தேர்தல் அறிவிப்பு வரலாம் எனவும், மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கலாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார். நல்ல தேர்தல் அனுபவம் உள்ள இந்தியா கூட்டணியே வெல்லும். விஜய்க்கு வாழ்த்துக்கள், விஜய் முயற்சி வெல்லாது என்று கூறிய ப சிதம்பரம், திமுகவுடன் காங்கிரஸ் குழு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துவார்கள். எத்தனை தொகுதிகள் என்பதை திமுக - காங்கிரஸ் தலைமை தான் முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ப சிதம்பரம், சில அறிவுஜீவிகள் உத்தரப் பிரதேசத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவதில் உடன்பாடில்லை. மெத்தப்படித்தவர்களோடு நான் பேச விரும்பவில்லை. இந்தியாவிலேயே தமிழகம் தான் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது என்று நிதி ஆயோக் சான்றே கூறுகிறது என கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications