சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ல் தொடங்கி மே 10 வரை நடைபெறும்! விடுமுறை நீங்கலாக மொத்தம் 22 நாட்கள்!
சென்னை: சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு இதனை அறிவித்தார் அவர்.

இதனிடையே எந்தெந்த தேதிகளில் எந்தெந்த துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் என்ற விவரம் பின்வருமாறு;
ஏப்ரல் 6 - நீர்வளத்துறை
ஏப்ரல் 7 -நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி
ஏப்ரல் 8 -கூட்டுறவு
ஏப்ரல் 9 -அரசு விடுமுறை
ஏப்ரல் 10 -அரசு விடுமுறை
ஏப்ரல் 11 -உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை
ஏப்ரல் 12 -நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை
ஏப்ரல் 13 -வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம்
ஏப்ரல் 14 -அரசு விடுமுறை
ஏப்ரல் 15 - அரசு விடுமுறை
ஏப்ரல் 16 -அரசு விடுமுறை
ஏப்ரல் 17 -அரசு விடுமுறை
ஏப்ரல் 18 -வருவாய்த் துறை
ஏப்ரல் 19 - சிறைத்துறை, செய்தித்துறை
ஏப்ரல் 20 -வீட்டு வசதித்துறை
ஏப்ரல் 21 -சமூக நலத்துறை
ஏப்ரல் 22 -பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை
ஏப்ரல் 23 -அரசு விடுமுறை
ஏப்ரல் 24 -அரசு விடுமுறை
ஏப்ரல் 25 -வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலத்துறை
ஏப்ரல் 26 -மின்சாரத்துறை, தொழிலாளர் நலத்துறை
ஏப்ரல் 27 -தொழில்துறை, தமிழ் வளர்ச்சித்துறை
ஏப்ரல் 28 -கைத்தறி, வணிகவரித்துறை
ஏப்ரல் 29 -சுகாதாரத்துறை
ஏப்ரல் 30 -அரசு விடுமுறை
மே 1 -அரசு விடுமுறை
மே 2 -பேரவை கூட்டம் இல்லை
மே 3 -அரசு விடுமுறை
மே 4 -போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத்துறை
மே 5 -இந்து சமய அறநிலையத்துறை
மே 6 - ஆதி திராவிடர் நலத்துறை
மே 7 -காவல்துறை
மே 8 -அரசு விடுமுறை
மே 9 -காவல்துறை (2-வது நாள் தொடர்ச்சி)
மே 10 -பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை.
மேற்கண்ட தேதிகளில் குறிப்பிட்டுள்ளபடி துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.












Click it and Unblock the Notifications