எடப்பாடி பழனிச்சாமி பேசும் போதே தடங்கல்... வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை: ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதை ரத்து செய்ததைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அவையிலிருந்து வெளியேறினர்.
அரசின் தனித்தீர்மானத்தை முதல் அமைச்சர் கொண்டுவந்துள்ளார். மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆய்வுசெய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 29 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிமுக ஆட்சி காலத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது அதனை திமுக எதிர்த்தது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். திமுக எப்போதுமே இரட்டை நிலைப்பாடு எடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
நிலுவையில் உள்ள எல்லா மசோதாக்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்வீர்களா என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், மாநில சுயாட்சி கொள்கையுடன் தொடர்ந்து செயல்படுவோம் சந்தேகமே வேண்டாம் என்று சொன்னார், தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்பதில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மீதமுள்ள மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, செய்யாறு விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசத் தொடங்கினார் அப்போது நேரரையில் தடங்கல் ஏற்பட்டது. இதனையடுத்து கார சார விவாதங்கள் நடைபெற்றன. சட்டசபையில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதை ரத்து செய்ததைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே அவையிலிருந்து வெளியேறினர்.
இதனையடுத்து சட்டசபையில் பேசிய துரைமுருகன் கடைசியில் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று கூறினார். முன்னதாக தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications