தமிழ்நாடு சட்டசபை சிறப்பு கூட்டம்: ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நாளை நிறைவேற்றம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் அனைத்தும் நாளைய சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடனான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், சட்டசபை மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது. அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். அப்படி ஆளுநர் மசோதாக்களை சட்டசபைக்கு திருப்பி அனுப்பினால் மீண்டும் சட்டசபையில் அம்மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படும் நிலையில் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தது. இந்த வழக்கு விசாரணை வரும் 20-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களை திடீரென சட்டசபைக்கு திருப்பி அனுப்பி வைத்தார். சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா ஆகியவற்றை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டசபைக்கே திருப்பி அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை கூடுகிறது. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டசபையில் நாளை மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு இதனைத் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications