Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று 2வது நாளாக கூடிய சட்டசபை.. முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்! சபை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று மீண்டும் கூடியது. நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடரில், உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில், 21 ஆம் தேதி (இன்​று), முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்​கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்​பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20) நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் ஒலிக்கப்படாததால் உரையை வாசிக்காமல் சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியேறினார். பின்னர், ஆளுநரை உரையை அவர் படித்ததாக பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரையை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார்.

Tamilnadu Assembly Appavu DMK

பின்னர் சட்டப் பேரவையிலிருந்து அதிமுக, பாஜக, பாமக கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. அதன்பிறகு அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் இந்தக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சட்டப் பேரவை கூட்டத்தை ஜனவரி 24 ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு கூட்டம் முடிவு செய்துள்ளது.

சட்​டப்​பேர​வைக் ​கூட்​டம் நேற்று முடிந்​ததும், ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்​பது தொடர்​பாக முடி​வெடுக்க, அலு​வல் ஆய்​வுக்​குழு கூடியது. அதன் ​பின்னர் பேர​வைத்​தலை​வர் அப்​பாவு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தினசரி காலை 9.30 மணிக்கு பேரவை கூடும். 21 ஆம் தேதி (இன்​று), முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் மறைவுக்கு இரங்​கல் குறிப்பு வாசிக்​கப்​படும் என்றார்.

பிரபல தொழில​திபர் அருணாசலம் வெள்​ளை​யன், கவிஞர் ஈரோடு தமி​ழன்​பன், தயா​ரிப்பாளர் ஏ.வி.எம்​. சர​வணன், மக்​களவை முன்​னாள் தலை​வர் சிவ​ராஜ் பாட்​டீல், எம்​.எல்​.ஏ. பொன்​னு​சாமி ஆகி​யோரின் மறைவு குறித்து இரங்​கல் தீர்​மானம் நிறை​வேற்​றப்​படு​வதுடன் பேரவை நிகழ்ச்​சிகள் இன்று நிறைவு பெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

அதன்படி, சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்​கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்​பட்டு வருகிறது. பிரபல தொழில​திபர் அருணாசலம் வெள்​ளை​யன், கவிஞர் ஈரோடு தமி​ழன்​பன், தயா​ரிப்பாளர் ஏ.வி.எம்​. சர​வணன், மக்​களவை முன்​னாள் தலை​வர் சிவ​ராஜ் பாட்​டீல், எம்​.எல்​.ஏ. பொன்​னு​சாமி ஆகி​யோரின் மறைவு குறித்து இரங்​கல் தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்து முடித்ததும் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் இன்றைய சட்டசபை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது.

அதைத்தொடர்ந்து நாளை 22 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் தொடங்​கும். வரும் 23 ஆம் தேதி 2022-2023 ஆம் ஆண்டு மிகைச் செல​வுக்​கான மானியக் கோரிக்​கை, அவைக்கு அளிக்​கப்​படும். அதற்​கான நிதி ஒதுக்க சட்ட மசோதா அறி​முகம் செய்​யப்​பட்​டு, விவாதமின்றி நிறை​வேற்​றப்​படும்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீது விவாதம் தொடர்ந்து நடை​பெறும். இறு​தி ​நாளான ஜனவரி 24 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பதில் அளிப்​பார். மேலும், சட்டப்பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​படும் மசோ​தாக்​கள் ஆய்வு செய்யப்படும், நிறை​வேற்​றப்​படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+