Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக சட்டசபை ஜூன் 20இல் கூடுகிறது.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு! முன்கூட்டியே தொடங்க என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது அது முன்கூட்டியே ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் எனச் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை கடைசியாகக் கடந்த பிப் மாதம் கூடியது. அப்போது தான் தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து விவாதங்களும் நடைபெற்றன.

tamilnadu assembly dmk tamil nadu budget 2024 2024 politics

தொடர்ந்து அப்போது சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு லோக்சபா தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், சட்டசபை கூடாமல் இருந்தது.

சபாநாயகர் அப்பாவு: இதற்கிடையே நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, வரும் ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டப்படுவதாக அறிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரில் பொது விவாதம் முடிந்த போதிலும், மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கவில்லை என்பதால் ஜூன் 24 ஆம் தேதி சட்டசபை கூட்டப்படுவதாக அவர் அறிவித்திருந்தார்.

மானியக் கோரிக்கை மீதான விவாதம் எத்தனை நாள், எந்தெந்த தேதியில் எந்தெந்த துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் என்பது குறித்தெல்லாம் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு சட்டசபை முன்கூட்டியே கூட்டப்படுவதாக அறிவித்துள்ளார்.

முன்கூட்டியே கூடுகிறது: இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி கூட்டப்படும் என அறிவித்து இருந்தேன். ஆனால், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் சட்டசபை கூட்டத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதலில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் இங்குத் தேர்தல் நடைபெற்றது. விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றிருந்தார். அவர் நாளை (ஜூன் 12) காலை 11 மணிக்குப் பதவியேற்க உள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

மேலும், மானிய கோரிக்கை எத்தனை நாள் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+