அதிகரித்த புக்கிங்.. கிடைத்தது ரெஸ்பான்ஸ்.. இன்று முதல் சென்னைக்கு கூடுதல் பஸ்களை இயக்க முடிவு
சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தினமும் முன்பதிவு செய்து வருவதால் இன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகம் சார்பில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் இடையே நீண்ட தூர பேருந்து சேவை செயல்படுகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பேருந்து சேவை அதிக அளவில் உள்ளது. இதேபோல் கோவை உள்ளிட்டமேற்கு மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை சென்னையில் இருந்து அதிக அளவில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ஐந்து மாதங்களாக விரைவு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. ஆனால் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயங்க தொடங்கியதை அடுத்து விரைவு பேருந்துகள் முழு வீச்சில் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் இயங்காத காரணத்தால் மக்கள் அதிக அளவு அரசு பேருந்துகளில் பயணிக்க முன் பதிவு செய்கிறார்கள். இதனால் கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது பற்றி போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், அரசு விரைவு பேருந்துகளில் கடந்த 3 நாட்களில் 17 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். தினமும் 5 ஆயிரம் பேர் பயணிக்கிறார்கள். தினமும் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்கிறார்கள். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications