6 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் சிரப்! தமிழகத்தில் கோல்ட்ரிஃப் மருந்துக்குத் தடை!
சென்னை: மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகள் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிகிச்சையின்போது எடுத்துக்கொள்ளப்பட்ட இருமல் சிரப்தான் காரணம் என்று சந்தேகிக்கப்பட்டிருப்பதால், கோல்ட்ரிஃப் சிரப்(Coldrif cough syrup) தமிழகத்தில் தடை செய்யப்படுவதாக அறவிப்பு வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1-7 வயதுக்கு உட்பட 6 குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தன. உயிரிழந்த அனைத்து குழந்தைகளுக்கும் சிறுநீரகம் செயழிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த குழந்தைகள் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, கோல்ட்ரிஃப் இருமல் மருந்துதான். குழந்தைகளின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது, சிறுநீரக திசுவில் 'டைஎத்தீலின் கிளைக்கால் ' எனும் ரசாயன பொருள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படும் இந்த ரசாயனம் இருமல் மருந்தில் கலக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனையடுத்து குழந்தைகளின் பிரேதப் பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த இருமல் சிரப், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா எனும் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனையடுத்து இந்த மருத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மத்தியப் பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ்குமார் மௌரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "ஃபினைலெஃப்ரின் ஹெல், குளோர்பெனிரமைன் மல்கேட் சிரப் (கோல்ட்ரிஃப்) ஆகிய மருந்துகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் இந்த ஆண்டு மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட SR-13 என்ற தொகுப்பு எண் கொண்டதாகும். இந்த மருந்தின் காலாவதி தேதி 2027ம் ஆண்டு ஏப்ரல் மாதமாகும்.
இந்த மருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. உற்பத்தி நிறுவனம் உங்கள் அதிகார வரம்பிற்குள் இருப்பதால், இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவும், வழங்கப்பட்ட மருந்து பற்றிய விவரங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இருமல் சிரப்களில் 'டைஎத்திலீன் கிளைகோல்' என்ற நச்சுப் பொருள் கலந்துள்ளதாக வெளியான தகவல்களின் அடிப்படையில், மத்திய சுகாதார அமைச்சகம், பல துறைகளை உள்ளடக்கிய விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் இந்த மருத்து விற்பனைக்கு தற்போது தடை பிறக்கப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் கோல்ட்ரிஃப் சிரப் விற்பனையைத் தடுக்கவும், இருப்பு உள்ள இடங்களில் அவற்றின் விற்பனையை தடுக்கவும் மருந்து ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டுத் துணை இயக்குநர் எஸ். குருபாரதி தெரிவித்தார். அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.
குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமானதாகச் சந்தேகிக்கப்படும் அதே கோல்ட்ரிஃப் சிரப்பின் ஒரு தொகுதி உட்பட, அதே உற்பத்தியாளர் தயாரித்த வேறு நான்கு வகையான மருந்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சிரப் சங்கரபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த இருமல் சிரப் புதுச்சேரி, ஒடிசா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுவதால், இந்த மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு, மருந்து விற்பனையைத் தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குருபாரதி குறிப்பிட்டார்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications