அந்தர் பல்டி.. கம்ப்ளீட் சரண்டர்- மோடிக்கு எதிராக திமுகவை ஆதரிப்பேன்- சீமான் பேச்சுக்கு பாஜக பதிலடி!
சென்னை: லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக வலிமையான வேட்பாளரை நிறுத்தினால் திமுகவை ஆதரிபேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக கடந்த சில நாட்களாக பேசி வரும் சீமான், IF suppose, ஒருவேளை என் தாய்நிலத்துக்குள் குறிப்பாக என் மாவட்டத்துக்குள்ள ராமேஸ்வரத்துக்குள்ள மோடி அய்யா நின்றால் நான் அவரை எதிர்த்து நிற்பேன். தம்பி படத்துல உரையாடல் வரும்ல.. நீ எந்த பக்கம் நின்னாலும் அந்த பக்கம் நிற்பேன்... அது மாதிரி நீ என் நிலத்தில் எங்க வந்து நின்றாலும் நான் நிற்பேன். இவனுக மாதிரி கூழை கும்பிடு போட்டு பேச்சுக்கு பேசுறது இல்லை. உண்மையிலேயே சண்டைக்காரன் மகன் சண்டைக்காரன். நான் நிற்பேன். ஒருவேளை திமுக தன் உதயசூரியன் சின்னத்திலேயே மோடியை வீழ்த்துவதற்கு ஒரு வேளை வலுவான வேட்பாளரைப் போட்டால் நான் போட்ட வேட்பாளரை திரும்பப் பெற்றுவிட்டு அந்த ஒரு தொகுதியில் திமுகவை ஆதரிப்பேன். ஆனால் திமுக கூட்டணிக்கு கொடுத்துவிட்டால் நான் நேரடியாக மோடியுடன் சண்டை போடுவேன்.. நிற்பேன். அப்ப வந்து, ஓட்டை பிரிக்கிறார் சீமான்.. கூரையை பிரிக்கிறார்னு பேசுனா பிச்சுபுடுவேன்.. பிச்சு.. அதான் நீ நில்லு நான் விலகுகிறேன் என்கிறேனே என கூறியிருந்தார்.

இது தொடர்பாக மூத்த பாஜக தலைவர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: சீமானின் இந்த நிலைப்பாட்டுக்கு என்ன வார்த்தை சொல்லலாம் எனில் 'அந்தர் பல்டி' 'கம்ப்ளீட் சரண்டர்'... அப்படின்னு வார்த்தைகளை உபயோகிக்கலாம். ஏனென்றால் ஆண்ட கட்சி, ஆளுகிற கட்சி இரண்டையும் எதிர்த்துதான் சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார். தன்னை ஒரு 3-வது சக்தி என மார்தட்டிக் கொள்கிறார் சீமான். அவருடைய வாக்கு வங்கி என்பதே திமுக, அதிமுக இல்லாதவர்கள்தான். திடீரென சீமான் அந்தர் பல்டி அடிக்க காரணம், எப்படியாவது தன்னை பல்டி அடிக்க வைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் காப்பாற்றிக் கொள்ள திமுகவிடம் சரணடைந்துவிட்டார் சீமான். அரசியலில் நிலையான கொள்கை கொண்டவராக நினைத்த சீமான், இப்படி பல்டி அடிக்கிற காரணத்தை தமிழ்நாடு மக்கள் என்ன என்பதை உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.
சீமான், திமுகவை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்? என்ன அழுத்தம் அவருக்கு? மிக பலவீனமான நிலையில் இருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை காப்பாற்ற நினைக்கிறார். மோடியை காரணம் காட்டி திமுகவிடம் சரணடைந்துள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications