கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்கியிருக்கீங்களா.. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்கியோர் கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு முழு வட்டியையும் தள்ளுபடி செய்ய ஏதுவாக வரவு செலவு திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக அரசு, விவசாயிகளை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளது..
2020-2021 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் வேளாண் துறைக்கு ரூ.11894.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின் இணைப்பு
தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை 70% மானியத்துடன் வேளாண் பொறியியல் துறை அமைத்து தரும் என்று துணை முதல்வர் அறிவித்துள்ளார். இதேபோல் வேளாண்மைக்கான மின் இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இதற்கு தமிழக அரசின் பங்காக ரூ.208.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

காய்கறி விதைகள்
வரும் 2020-2021 ம் ஆண்டில் ரூ.1844.97 கோடி மதிப்பில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர் பாசன வசதி பெறும் என்று கூறிய நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 2020-2021 ம் ஆண்டில் 325 மெ.டன் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார். கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20 ம் ஆண்டில் ரூ.68.35 கோடி நிதி அள்ளிக்கப்பட்டது. 2020-21 ம் ஆண்டில் ரூ.75 கோடி கூடுதல் நிதியுதவியுடன் அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.

கரும்பு விவசாயிகளுக்கு
காவிரி வடிநிலப்பகுதிகளில் உள்ள 392 கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள மாநில அரசின் பங்களிப்பாக ரூ.67.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்/ குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,364 நீர்ப்பாசன பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
நிலையான கரும்பு உற்பத்திக்கு 2020-2021ம் ஆண்டில் ரூ.12 கோடி மதிப்பில் 74,132 ஏக்கரில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டங்களின் தொழில் நுட்பங்களுடன் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இணைப்பு கால்வாய்
காவிரி முதல் வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் கூறினார்.

பயிர் கடன்
அதேநேரம் கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தள்ளுபடி செய்யப்படவில்லை. இது தொடர்பாக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் கூறுகையில், கூட்டுறவு அமைப்புகள் மூலம் 2020-21 ஆம் நிதியாண்டில் பயிர்க்கடனாக மொத்தம் ரூ.11000 கோடி வழங்கப்படும்.கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவர்களுக்கு முழு வட்டியையும் தள்ளுபடி செய்ய ஏதுவாக வரவு செலவு திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications