வாழ்வா, சாவா.. விளிம்பில் அதிமுக.. தீப்பொறிகளை கிளப்ப தயாராகும் திமுக.. பரபரப்பில் தமிழகம்!
அதிமுகவுக்கு இதுதான் கடைசி பட்ஜெட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது
Recommended Video
சென்னை: இந்த தமிழக பட்ஜெட், வாழ்வா, சாவா நிர்மாணிக்கும் பட்ஜெட்டாக அதிமுகவுக்கு அமைந்துள்ளது... ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுக போராடுகிறது.. தீப்பொறிகளை கிளப்பி இந்த பட்ஜெட் தொடரை சாதகமாக்கி கொள்ள திமுக தயாராகிறது.. இதனால் மீண்டும் வருவோமா என்ற ஏக்கம் அத்தனை
அதிமுகவினரின் மனதிலும் உள்ளது.. தொண்டர்கள் ஒருவிதமான உணர்வுகளில் மூழ்கியுள்ளனர்!!
இன்றைய பட்ஜெட் மிக முக்கியமான பட்ஜெட்டாகவும் பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அதிமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது ஆட்சியில் உள்ள அதிமுக தாக்கல் செய்யும் இறுதி பட்ஜெட் இதுதான்.
கருணாநிதி எந்த அளவுக்கு பட்ஜெட் மீது விழிப்பாக இருந்தாரோ, அதே அளவுக்கு ஜெயலலிதாவும் அதை கடைப்பிடித்து வந்தார்... ஜெயலலிதா ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.. அரசு ஊழியர்களை தாங்கி பிடித்து கொண்டவர் ஜெயலலிதா.

மாணவர்கள்
அதேபோல, விவசாயிகள், மாணவர்கள் நலனில் ஸ்பெஷல் அக்கறை எடுத்தே பட்ஜெட் தயாராகும்.. கூடுமானவரை குறைகளே பெருமளவில் சொல்லாமல் அனைத்து தரப்பையும் பூர்த்தி செய்யும்படி பார்த்து கொள்வார் ஜெயலலிதா! இப்போது, அவர் இல்லாத நிலையில் அதிமுகவின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்... அதிமுக ஆட்சி காலம் நிறைவடைய உள்ளது.

கடைசி பட்ஜெட்
அதன்பிறகு பொதுத்தேர்தல் நடக்கும்... இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இப்போது தாக்கல் செய்வதுதான் கடைசி பட்ஜெட் ஆகும்! இந்த ஆட்சிக்கான கடைசி பட்ஜெட் இதுவா? அல்லது அதிமுகவுகான கடைசி பட்ஜெட் இதுவா என்பதுதான் தொண்டர்களின் கலக்கமும், குழப்பமும்!

விவசாயிகள்
காரணம், ஏகப்பட்ட பிரச்சனைகள், சிக்கல்கள், சர்ச்சைகளில் அதிமுக சிக்கி உள்ளது.. தமிழக பிரச்சனைகள் என்று எடுத்து கொண்டால், குடியுரிமை திருத்த சட்டம், 7 பேர் விடுதலை, குரூப் 4 தேர்வு முறைகேடு, ஹைட்ரோ கார்பன் திட்டம்.. போன்றவைகளில் விழித்து கொண்டுள்ளது.. இதில் சிலவற்றில் மத்திய பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிமுக எடுத்திருந்ததுதான்.. இதில் ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்ற சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று ஏற்கனவே எடப்பாடியார் அறிவித்துள்ளார்.. அதனால் விவசாயிகளின் வயிற்றில் எடப்பாடியார் நிச்சயம் பாலை பார்த்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுபானங்கள்
அதேபோல, அரசின் வருவாயை பெருக்க என்னசெய்வதன்றே தெரியாமல், கடைசி நேரத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி வருவாயை கூட்டி உள்ளது.. இதுபோக மத்திய அரசிடம் நிலுவை 3,370 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது.. மேலும் ஜிஎஸ்டி வரிவருவாயில் 4,073 கோடி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. ஆக, நிதி வருவாய், நிதி பற்றாக்குறை என்பது ஓரளவு சமாளிக்கப்படும் என்றே கணிக்கப்படுகிறது.

படு தீவிரம்
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தனிப்பட்ட புகார்கள், சர்ச்சைகளில் அதிமுக வசமாக சிக்கி உள்ளது.. குறிப்பாக டிஎன்பிசி தேர்வு முறைகேடு, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பு விவகாரம், ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சைகள் என பட்டியல் நீள்கிறது.. இதை எல்லாம் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.. இந்த பட்ஜெட்டை விட்டால், எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது என்பதிலும் திமுக படு தீவிரமாகவே உள்ளது.. அதனால் தீப்பொறிகளை கிளப்ப திமுக தயாராக காத்து கொண்டுள்ளது.. இதிலிருந்து எல்லாம் அதிமுக எப்படி மீள போகிறது என்பதுதான் அக்கட்சி தொண்டர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது!!!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications