Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக ரைட்ஸ் திட்டம்..' மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து அமைச்சர் பிடிஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி உலகின் பிற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் உலக வங்கியின் உதவியுடன் ரைட்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10 மணியளவில் பட்ஜெட் உரை வாசிக்கத் தொடங்கிய அமைச்சர் பிடிஆர், சுமார் மூன்று மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார்

கருணாநிதி

கருணாநிதி

அமைச்சர் பிடிஆரின் பட்ஜெட் அறிவிப்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பற்றிய அறிவிப்பு குறித்துப் பேசிய அமைச்சர் பிடிஆர், "சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துறையை முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறுவினார்.

இலவச பேருந்து பயணம்

இலவச பேருந்து பயணம்

அதேபோல மாற்றுத் திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள தற்போதைய தமிழ்நாடு முதல்வரும் மாற்றுத்திறனாளிகள் நலனைத் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் ஒரு உதவியாளருடன் அனைத்து வகையான அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் ஏற்படுத்தப்படும்

உதவித் தொகை

உதவித் தொகை

தற்போது காத்திருப்பிலுள்ள 9176 நபர்களுக்கு மாதம் 1500 ரூபாய் பராமரிப்பு தொகையை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அவர்கள் விரும்பும் உபகரணங்களை வாங்க உதவும் வகையில் 50.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ரைட்ஸ் திட்டம்

ரைட்ஸ் திட்டம்

உலக வங்கியின் உதவியுடன் ரைட்ஸ் திட்டம் செயல்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். குறைபாடுகளைத் தொடக்க நிலையில் கண்டறிதல், பராமரிப்பு, கல்விச் சேவைகளை உடனடியாக அணுகுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு, மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்டத்தைப் பரவலாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளே முன்னுதாரணமாக இருக்கும். ஆறு ஆண்டுகளில் சுமார் ரூ 1072 மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.

Recommended Video

    Petrol விலை குறைப்பு முதல் பெண்களுக்கு பண உதவி வரை TNBudget-டின் டாப் 10 அறிவிப்புகள் விரிவான அலசல்!
    திருநங்கைகள்

    திருநங்கைகள்

    அதேபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கு உதவும் வகையில் மாநிலத்தில் இருக்கும் கைவிடப்பட்ட 3ஆம் பாலினத்தவருக்கு ஓய்வூதியம் வழங்க 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+