Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவரா? மூத்த அமைச்சருக்கு போன முக்கியமான துறை.. ஸ்டாலினின் ஆக்சனுக்கு பின் இருக்கும் பிளான் 2024!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த முடிவிற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 19 மாதங்கள் ஆகிறது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்படுகிறது.

உதயநிதி மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு உள்ளன. மூத்த அமைச்சர்கள் சிலருக்கு கூடுதலாக இலாக்காக்கள் கொடுக்கப்பட உள்ளன.

அமைச்சர் ராஜகண்ணப்பன்

அமைச்சர் ராஜகண்ணப்பன்

அந்த வகையில் கடந்த சில காலமாக அமைதியாக இருக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒரு பொறுப்பு வழங்கப்பட உள்ளது . ஜாதி ரீதியிலான புகாரில் சிக்கி இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருந்தவர் ராஜேந்திரன். இவரை "எஸ்சி" என்று கூறி ஜாதி ரீதியாக திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் வைக்கப்பட்டது இதையடுத்து ராஜகண்ணப்பன்அமைச்சரவை இலாக்கா மாற்றப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் ராஜகனப்பன் தரப்போ.. அந்த ராஜேந்திரன் அதிமுக விற்கு நெருக்கமானவர். வேண்டும் என்றே எனக்கு எதிராக சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள் என்று கூறினார். நான் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக தவறான பிம்பம் கட்டமைப்படுகிறது. நான் அமைதியாக இருந்தால் கூட என்னை வைத்து சர்ச்சையை உருவாக்குகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மட்டும் இருந்த ராஜகணப்பன் கடந்த சில நாட்களாக மிகவும் அமைதியாக இருந்தார். மூத்த அமைச்சராக இருந்தும் இவருக்கு ஒரு துறை மட்டும், அதிலும் பெரிதும் அதிகாரம் இல்லாத துறை மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கொஞ்சம் ஹை பெட்ஜெட் துறை ஆகும். ராணிப்பேட்டை காந்தி அமைச்சரிடம் இருந்து அந்த துறை வாங்கப்பட்டு இவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

2024 தேர்தல்

2024 தேர்தல்

2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தென் மண்டலத்தில் இவரின் சமூகத்திற்கு அதிக வாக்கு வங்கி உள்ளது. தென் மண்டலத்தில் லோக்சபா தேர்தலின் போது இவரின் சமூகம் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக விளங்க போகிறது. இந்த நிலையில்தான் ஓரம்கட்டப்பட்டு இருந்த ராஜகண்ணப்பன் மீண்டும் லைம் லைட்டிற்கு திரும்பி இருக்கிறார். 2024 தேர்தல் நெருங்கும் நிலையில், ராஜகண்ணப்பன் இனி உற்சாகமான பணிகளை செய்ய வசதியாக இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+