நல்லா படிக்கணும்..ஆவடி டான்யா வீட்டிற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்
முக தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து வீடு திரும்பிய சிறுமி டான்யாவிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சென்னை: முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டான்யாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆவடியில் புதுமைப்பெண்கள் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், 2ஆம் கட்ட அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள சிறுமி டான்யாவின் இல்லத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா, அரியவகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து செய்தி வெளியானது. இதையடுத்து, சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு டான்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கடந்த 29ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.சிகிச்சை முடிந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி டான்யாவை வீட்டுக்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் , முக சிதைவுக்கு சிகிச்சைளிக்கப்பட்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும். சிறுமி குடும்பத்திற்கு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றார். இந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுமி டான்யாவை அமைச்சர் நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பூங்கொத்து அளித்து வீட்டுக்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

புதிதாக பிறந்தது போல மறுவாழ்வு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டான்யா. செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி டான்யா, இனி என்னை யாரும் ஒதுக்கமாட்டார்கள். ஜாலியாக பள்ளிக்கு செல்வேன். அறுவை சிகிச்சையின் மூலம் தன் கன்னம் சரியானது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய டான்யா சிகிச்சை அளிக்க உதவிய முதலமைச்சருக்கு நன்றி எனவும் தெரிவித்தார். நான் பள்ளிக்கு சென்று நன்றாக படித்து முதலமைச்சரின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றும் கூறினார்.
இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து 8 மணி நேரம் நடக்கும் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்தனர்.

அதன்பிறகு சிகிச்சை முடிந்து தனது வீடு திரும்பியுள்ள சிறுமி டான்யாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இப்போது எப்படி இருக்கிறது? நன்றாக படிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆவடியில் உள்ள கல்லூரியில் இன்று புதுமைப்பெண்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து அருகில் இருந்த சிறுமி டான்யாவின் வீட்டிற்கு நேரில் சென்றார். முதல்வர் ஸ்டாலினை எதிர்பார்க்காத டான்யாவின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications