அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா- முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
சென்னை: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டு சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான டெல்லி பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா மறைவுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா என்றும் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஜி.என்.சாய்பாபா. பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். மாவோயிஸ்டுகள் வேட்டை என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ஆபரேஷன் க்ரீன் ஹண்ட் எத்தனை ஆயிரம் பழங்குடி மக்களை காவு கொண்டது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார்.

பழங்குடிகளின் பூர்வ நிலமான மலைகளை சுரங்கத் தொழிலுக்காக பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கு எதிராக இடைவிடாது குரல் கொடுத்தவர் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா. இத்தனைக்கும் 90% மாற்றுத் திறனாளி. சக்கர நாற்காலி இல்லாமல் இயங்க முடியாதவர்.
இத்தகைய போராளி பேராசிரியர் சாய்பாபாவுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளுக்கு எதிராகப் போராடி சட்டம் போராட்டம் நடத்தி சில மாதங்களுக்கு முன்னர்தான் விடுதலையாகி இருந்தார் பேராசிரியர் சாய்பாபா. மேலும் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பேராசிரியர் சாய்பாபா மரணம் அடைந்தார்.
Prof. G.N. Saibaba’s passing away is a profound loss for the human rights community. A tireless advocate for the oppressed, he fearlessly fought against injustice, even when his own freedom and health were at risk. His courage in defending civil liberties, despite many… pic.twitter.com/eLbXOmGGyK
— M.K.Stalin (@mkstalin) October 13, 2024
பேராசிரியர் சாய்பாபா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களது மறைவு மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். தனது சுதந்திரமும் உடல்நிலையும் அச்சுறுத்தலில் இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி அவர். பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் காட்டிய நெஞ்சுரம் வாய்மைக்கான நிலைத்த அடையாளமாக என்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது அன்புக்குரியோர்க்கும் இந்தக் கடினமான வேளையில் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications