தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய், அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு வலியுறுத்தியுள்ள முக்கிய அறிவுறுத்தல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் கூட்டம் முடியும் வரை எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என அமைச்சர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர். குறிப்பாக மதம், சாதி மற்றும் சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தள்ளி நிற்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், "மத சார்புள்ள எந்த நிகழ்வுகளிலும் அமைச்சர்கள் கலந்து கொள்ளக் கூடாது. இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் உள்ளிட்ட எந்த மத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டாம்" என்று தெளிவாக அறிவுறுத்தினார். பட்ஜெட் தாக்கல் செய்யும் முக்கிய கட்டத்தில் அரசு நிர்வாகம் சீராக இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர், எந்த ஒரு தேவையற்ற சர்ச்சையும் அரசுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.

Vijay tvk

இந்த நிலையில், முதல்வர் விஜய் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தபோது, தமிழக கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டமன்ற சபாநாயகரும், ஒரு அமைச்சரும் கலந்து கொண்டு உரையாற்றினர். சபாநாயகர் பேசுகையில், "சிறுபான்மையினருக்கான இந்த அரசு. இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காக இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது" என்ற தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அமைச்சரும் இதே கருத்துகளை ஆதரித்து பேசினார்.

உளவுத்துறை அதிகாரிகள் இந்த நிகழ்வை உன்னிப்பாக கண்காணித்து, பேச்சுகளின் விவரங்களை முதல்வருக்கு உடனடியாக தெரிவித்தனர். டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும் முதல்வர் விஜய் சபாநாயகரை அழைத்துப் பேசினார். இந்த சம்பவம் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறிய முதல்வர், இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என சபாநாயகர் உறுதியளித்தார்.

மேலும், அந்த அமைச்சர் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவரது கட்சித் தலைமைக்கு விவரத்தை தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டார். அமைச்சர் ஆனந்த் மூலம் இந்த செய்தி கூட்டணிக் கட்சிக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு முதல்வர் விஜய் முதல் நிலை அமைச்சர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து பேசினார். "பட்ஜெட் கூட்டம் முடியும் வரை எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். மத ரீதியான, சாதி ரீதியான அல்லது சட்டம்-ஒழுங்கு சார்ந்த எந்த பிரச்னையிலும் ஈடுபடாதீர்கள். ஒரு சர்ச்சையை சமாளிக்கவே நிறைய நேரம் வீணாகும். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்" என்று அறிவுறுத்தினார்.

மேலும், மற்ற அமைச்சர்களுக்கும் இதே உத்தரவை தெரிவிக்குமாறு அமைச்சர் ஆனந்துக்கு பொறுப்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆனந்த் ஒவ்வொரு அமைச்சரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வரின் எச்சரிக்கையை விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிலையில், அமைச்சர்கள் இப்போது தங்களுக்கு அழைப்பு வரும் எந்த விழாவிலும் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என இருமுறை யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம். ஒரு சாதாரண நிகழ்வு கூட பெரிய சர்ச்சையாக மாறிவிடக் கூடாது என்பதில் முதல்வர் மிகவும் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எச்சரிக்கை தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை மேலும் ஒழுங்குபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தை சுமுகமாக நடத்தி, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவிப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது.

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+