“தோல்வின்னு சொல்ல முடியாது..” செல்வப்பெருந்தகை சொன்ன மழுப்பல் பதில்! பீகாரில் அடி கொஞ்சம் ஓவர்
சென்னை: "இதை தோல்வி என்று சொல்ல முடியாது. வெற்றிக்கான வாய்ப்பை இழந்திருக்கிறோம். அவ்வளவுதான்" என்று பீகார் தேர்தல் தோல்வி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி என்டிஏ கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் வெறும் 4 தொகுதிகளில் சுருங்கியிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,

"காங்கிரசுக்கு எப்பவுமே பின்னடைவு கிடையாது. ஆட்சி அதிகாரத்தை சுவைக்க மட்டுமே காங்கிரஸ் பேரியக்கம் உருவாக்கப்படவில்லை. அடையாளம் அற்றவர்களுக்கு, பேச்சுரிமை இல்லாதவர்களுக்குமான இயக்கம்தான் காங்கிரஸ். நாங்கள் வெற்றி தோல்வியை பற்றி எல்லாம் கவலைப்படுவது கிடையாது. இது மக்கள் இயக்கம். இயங்கிக்கொண்டே இருக்கும்.
பீகார் நிலவரத்தில், தோல்வின்னு சொல்ல முடியாது. வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கோம். தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் உறுதியான முடிவு தெரியவில்லை. எனவே பொறுத்திருந்து பார்ப்போம். சில நேரங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது என்றும், சில நேரங்களில் ஜேடியு முன்னிலையில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். எனவே ரிசல்ட் வரட்டும் பொறுத்திருந்து பார்ப்போம்.
வெற்றி பெற்றால் துள்ளி குதிப்பதும், வெற்றி வாய்ப்பை இழந்தால் சோர்வடைவதும் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. என்னைக்கும் மக்கள் குரலாக இருப்போம். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பற்றி தொடர்ந்து நாங்கள் பேசிக்கொண்டே இருக்கிறோம். தேர்தல் முடிவுகள் பீகாரில் வந்த பிறகு இது குறித்து விவாதிப்போம். பீகாரில் 17 லட்சம் வாக்குகள் அகற்றப்பட்டிருக்கிறது. அதெல்லாம் என்ன வாக்குகள்? ஜனநாயகம் வீழ்ந்து விடக்கூடாது, வீழ்வதற்கு யாரும் அனுமதிக்க கூடாது, ஜனநாயகம் வென்றெடுக்க வேண்டும். இதுதான் நேரு பிறந்த நாளில் எங்களுடைய பிரகடனம்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றியிருந்தது. கடந்த 2014ம் ஆண்டில் பெரும்பான்மை பெற்ற பாஜக, கடந்த 2019ல் பெரும்பான்மை பெற்ற பாஜக, 2024ல் பெரும்பான்மை பெறமுடியவில்லையே. காங்கிரசால்தான் அது சாத்தியமாகியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications