இதுதான் தமிழ்நாடு.. சூரிய ஒளி மின்சாரத்தில் ரெக்கார்ட்.. இவ்வளவு உற்பத்தியா? ஏன் முக்கியம் தெரியுமா?
சென்னை: மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது.
அனல் மின் நிலையம், அணு மின் நிலையங்கள் அல்லாமல் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் காற்று மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். செலவு குறைவு. அதேபோல் சுற்றுசுழலுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. முக்கியமாக ஆசியாவிலேயே தமிழ்நாட்டில்தான் காற்றாலை மூலம் அதிகம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
உலகிலேயே சொந்த நாட்டு மின்சார உற்பத்தியில் காற்றாலை மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு டென்மார்க்தான். 1970ல் இருந்து டென்மார்க் காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 நாடாக உள்ளது.

மின்சாரம்
நவீன தொழில்நுட்பம், அதிக மின்சார உற்பத்தி என்று காற்றாலை உற்பத்தியில் டென்மார்க் பல புரட்சிகளை செய்துள்ளது. இதன் காரணமாகவே உலகில் பல வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டில் கடலில் காற்றாலை மின் உற்பத்தியை ஏற்படுத்தி டென்மார்க் நிறுவனங்களை அல்லது டென்மார்க் அரசை அணுகுகிறது. டென்மார்க்கின் மொத்த மின் தேவையில் 47% மின்சாரம் கடலில் அமைக்கப்பட்டு இருக்கும் காற்றாலை மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட டென்மார்க்கிற்கு இணையாக தமிழ்நாட்டிலும் காற்றாலை மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

காற்றாலை
தமிழ்நாடு தனி நாடாக வைத்து பார்த்தால் உலகிலேயே இரண்டாவது பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி நாடாக இருக்கும். இன்னும் பத்து வருடங்களில் டென்மார்க்கின் மொத்த மின் தேவையில் 85% வரை காற்றாலை மின்சாரம் மூலமே பூர்த்தி செய்யப்படும் என்கிறார்கள். கடலில், கடலுக்கு அருகே, நிலத்தில் என்று மூன்று வகையான காற்றாலை திட்டங்களை அந்த நாடு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக டென்மார்க் நாட்டுடன் தமிழ்நாடும் காற்றாலை மின்சார உற்பத்திக்கு ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளது. அவர்களுடன் இதற்கான சில ஒப்பந்தங்களை போட்டுள்ளது.

தமிழ்நாடு சாதனை
இது ஒரு புறம் இருக்க சூரிய ஒளி மின்சாரத்திலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் இந்த மின் நிலையத்தை தொடங்கி வைத்தார். 150 கோடி ரூபாயில் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் இந்த சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு சூரிய ஒளி மின்சாரத்திலும் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.

ராஜஸ்தான்
அந்த வகையில் நேற்று தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மின் உற்பத்தி, நேற்று (22/12/2022) 4141 MW அளவில் உச்சம் தொட்டு இருக்கிறது. தமிழ்நாடு இன்னும் சூரிய ஒளி மின்சாரத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இதற்கு நிறைய வேற்றுநிலப்பரப்பு தேவை என்பதால் தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்துவது இல்லை. ராஜஸ்தானில் நிறைய பாலைவன பகுதிகள், வெற்று நிலப்பகுதிகள் உள்ளதால் அங்கு 14,454 மெகா வாட் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் அமைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 5,690 மெகா வாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பேனல்கள் உள்ளன.

உற்பத்தி
தமிழ்நாட்டில் 5,690 மெகா வாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பேனல்கள் இருந்தாலும் இவை எப்போதும் 100% மின் உற்பத்தியை மேற்கொள்வது. இதில் நிறைய மின் இழப்புகள் இருக்கும். வானிலை காரணமாக மின் உற்பத்தி குறையும். இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டில் 4141 MW மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில் இதுதான் மிக அதிகம்.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications