அத்துமீறும் அரசுபள்ளி மாணவர்கள்! நம் கையை நாமே வெட்டுவது போல்உள்ளது! எச்சரித்த டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை : அரசுப்பள்ளிகளில் ஆசிரியரை தாக்க முற்படுவது, அங்கிருக்கும் பொருட்களை உடைப்பது போன்ற செயல்களை மாணவர்கள் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் எனவும் இது போன்ற செயல்கள் இனிமேல் நடக்கக்கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரிடம் அத்துமீறும் சம்பவங்கள் தற்போது வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சக மாணவர்களை வகுப்பறைக்குள் அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகளும் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்

டிஜிபி சைலேந்திர பாபு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " நான் இரண்டு காணொலிகளைப் பார்த்தேன், அதில் அரசு பள்ளியில் மாணவர் ஒருவர் தாக்க முற்படுவது போல இருந்தது. இன்னொரு காணொலியில் வகுப்பில் இருக்கக் கூடிய டேபிள் சேர் போன்ற பொருட்களை உடைத்தனர். இதனைப் பார்க்கும் போது பாரதியார் கூறியதைப் போல நெஞ்சு பொறுக்குதில்லையே என்பது தான் நினைவுக்கு வந்தது. மாணவர்களே நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நம் பெற்றோர்கள் ஏன் நம்மை அரசுப்பள்ளிக்கு அனுப்பினார்கள். அவர்களிடம் அதிகமான வருமானம் கிடையாது சொத்துக்கள் கிடையாது.

பள்ளி தான் சொத்து
உங்கள் அப்பா அம்மாவுக்கு சொத்து இல்லை. உங்களுக்கு நிறைய சொத்து இருக்கிறது. நிறைய ஆதாரங்கள் இருக்கிறது நீங்கள் படிக்கும் அரசுப் பள்ளிதான் உங்கள் சொத்து அங்கிருக்கும் விளையாட்டு மைதானம் அதுதான் உங்கள் சொத்து அந்த வகுப்பறை உங்கள் சொத்து. நாங்கள் படிக்கும் போது பென்ச் டேபிள் கிடையாது தரையில் அமர்ந்துதான் படிப்போம். இப்போது அரசு உங்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறது. அதை நீங்கள் உடைக்கிறீர்கள்.அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் தான் உங்கள் சொத்து. அவர்களால் தான் நான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.

வேதனை அளிக்கிறது
ஆசிரியரை அடிக்க மாணவன் கை ஓங்குவது வேதனை அளிக்கிறது ஏன் இது போன்று நடக்கிறது. ஆசிரியர்கள் தான் நமக்கு அனைத்தையும் கற்பித்தவர்கள். ஆசிரியர்கள் தான் நமக்கு மிகப் பெரிய ஆதாரம். அவர்கள் தான் மிகப்பெரிய சொத்து. அறிவு செயல்திறன் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய மாணவர்கள்,வன்முறைச் செயலை ஏன் செய்கிறீர்கள். இது நமது வீட்டையே நாம் கொளுத்துவது போல் இருக்கிறது. நம் கைகளை நாமே வெட்டிப் போடுவது போல் இருக்கிறது.

சட்டப்படி குற்றம்
தயவுசெய்து மாணவர்கள் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம். பள்ளிக்கு மிகப்பெரிய நோக்கத்தோடு நாம் வருகிறோம். ஒரு நல்ல மனிதனாக , சிந்தனை மிக்க மனிதனாக வளர வேண்டிய மாணவர்கள், பள்ளிக்கூடத்திற்கு மரியாதை கொடுக்கவேண்டும் ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற வன்முறைகள் சட்டப்படி குற்றம். சட்டம் மாணவர்களுக்கு சில பாதுகாப்பை கொடுத்திருந்தாலும் இது குற்றமாகக் கருதப்படும் எனவே இதுபோன்ற செயல்களை மாணவர்கள் ஈடுபட வேண்டாம்", என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications