Tamil Nadu District Wise Corona Update: கொரோனா தொற்றில் மீண்டவர்கள் எண்ணிக்கை 5,86,454 அக உயர்வு!!
சென்னை: சென்னையில் இதுவரைக்கும் கொரோனாவுக்கு 3,351பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் 584 பேரும், திருவள்ளூரில் 573 பேரும், கோவை மாவட்டத்தில் 479 பேரும், சேலத்தில் 365 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,052 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரைக்கும் 1,78,108 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 38,487 பேருக்கும், கோவையில் 35,933 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 23,120 பேருக்கும், மதுரையில் 17,214 பேருக்கும், சேலத்தில் 22,408 பேருக்கும், திருவள்ளூரில் 34,154 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரைக்கும் 6,40,943 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5,86,454 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44,437 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக தென்காசியில் 8 பேருக்கும், பெரம்பலூரில் 9 பேருக்கும், அரியலூரில் 20 பேருக்கும், விருதுநகரில் 23 பேருக்கும், ராமநாதபுரத்தில் 14 பேருக்கும் இன்று தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று உயிரிழந்தவர்களில் 31 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 37 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இன்னும் சென்னையில் 13,280 பேரும், கோவையில் 4,764 பேரும், செங்கல்பட்டில் 2,609 பேரும், சேலத்தில் 2,306 பேரும், திருவள்ளூரில் 1,610 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications