தமிழ்நாடு முழுக்க.. உள்ள வீடுகளுக்கு.. தமிழக மின்சார வாரியம் அனுப்பிய முக்கிய மெசேஜ்.. நோட் பண்ணுங்க
சென்னை: ஆர்சிடி கருவி தொடர்பாக தமிழக மக்களுக்கு மின்சார வாரியம் முக்கியமான எச்சரிக்கை, ஆலோசனை ஒன்றை வழங்கி உள்ளது. வீடுகளில் சிறிய பாதுகாப்பு கருவி ஒன்றை பொறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
RCD உயிரை காக்கும். கட்டிடத்தின் உள் மின் இணைப்புகளில் ஏற்படும், பழுதுகளில் இருந்து சிறிதளவு மின் கசிவு இருந்தாலும் #RCD மின்னோட்டத்தை நிறுத்தி விடும் மழைக்காலம் வரும் முன் உங்கள் வீட்டில் மின் திறனாளரைக் கொண்டு 30mA RCD பொருத்துங்கள், என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி நம் வீடுகளில் RCD பொருத்துவது, நமது அன்புக்குரியவர்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது! இந்த சிறிய அக்கறை மின்சார வீடுகளில் மின் விபத்துகளைத் தடுக்கும். வீடு நமது அன்பின் கூடு, அதனை RCD-யுடன் பாதுகாப்போம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதெல்லாம் சரி அது என்ன ஆர்சிடி கருவி.. சின்ன வயதில் எஸ்பிடி எமர்ஜென்சி கேள்வி பட்டு இருக்கிறோம்.. இது என்ன கருவி என்று நினைக்கிறீர்களா. விளக்கம் இதோ
ஆர்சிடி என்றால் என்ன? ஏன் பொறுத்த வேண்டும்?: எஞ்சிய மின்னோட்டம் சாதனம் (ஆர்சிடி) என்பது ஒரு பாதுகாப்பு சாதனம் ஆகும். இது மின்சார ஓட்டத்தில் ஏதேனும் தவறு இருந்தால் தானாகவே மின்சாரத்தை அணைக்கும் திறன் கொண்டது ஆகும். RCDகள் சாதாரண உருகிகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்களை விட அதிக உணர்திறன் கொண்டவை. அதாவது வீட்டில்தான் பியூஸ் இருக்கிறேதே என்று சொல்ல வேண்டாம்.
இது பியூஸை விட வேகமானது. அதோடு திறன் கொண்டது. மின்சார அதிர்ச்சிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. இதனால் உங்களுக்கு ஷாக் அடிப்பதை தவிர்க்கலாம்
ஒரு RCD மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு மின்சார ஓட்டம் தவறான நேரங்களில் தடுக்கப்பட்டு உயிர்காக்க முடியும். RCD கருவி பொதுவாக மின்சார சர்க்யூய்ட் எனப்படும் சுற்றுடன் பாயும் மின்சாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.
உதாரணமாக.. நீங்கள் மின்சார வயரை தொடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. நேரடியாக மின்சார பகுதியை தொட்ட நபரின் வழியாக, திட்டமிடப்படாத பாதையில் மின்சாரம் பாய்வதைக் கண்டறிந்தால், அது மின்சுற்றை மிக விரைவாக அணைத்துவிடும். இதனால் இறப்பு அல்லது கடுமையான காயம் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் ஆர்சிடி குறைக்கிறது.
எப்படி பாதுகாக்கும் : ஈரமான நிலையில் மின்சாரத்தைப் பயன்படுத்துவது மின்சார அதிர்ச்சியின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. நீங்கள் ஈரமாகவும், தரையுடன் தொடர்பு கொண்டவராகவும் இருந்தால், அது உங்கள் வழியாக மின்சாரம் பாய்வதை எளிதாக்குகிறது. நீங்கள் ஈரமாக இருக்கும் குளியலறைகள் மற்றும் தோட்டங்கள் போன்ற பகுதிகளில் மின்சார அதிர்ச்சியிலிருந்து உங்களைப் பாதுகாக்க RCDகள் உதவும்.
மின்சார உபகரணங்களை வெளியில் பயன்படுத்தும் போது RCD பாதுகாப்பு இருப்பது முக்கியம் .
வகைகள்: நிலையான RCD கள் - நுகர்வோர் அலகு (பியூஸ் பாக்ஸ்) இல் நிறுவப்பட்டுள்ளன. இவர் தனிநபர் அல்லது குழுக்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியும். ஒரு நிலையான RCD ஆனது ஒரு சுற்று , இணைக்கப்பட்ட சாதனங்களில் உள்ள அனைத்து சாக்கெட்டுகளையும் தொடர்ந்து பாதுகாப்பதால், மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது.
சாக்கெட்-அவுட்லெட் RCD கள் : ஒரு நிலையான அவுட்லெட்டை பயன்படுத்த முடியாத பட்சத்தில் ஒரு சிறப்பு சாக்கெட்-அவுட்லெட்டை பயன்படுத்தலாம். தனி தனியாக உபகாரணங்களுக்கு என்று ஆர்சிடி வாங்கிக்கொள்ளலாம்.
போர்ட்டபிள் RCD கள்: இவை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல கூடியது. நிலையான அல்லது சாக்கெட்-அவுட்லெட் RCD கள் கிடைக்காதபோது இவை பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவை இந்த ஆர்டிடி உடன் தொடர்பில் உள்ள நபருக்கு மட்டுமே பாதுகாப்பை வழங்குகின்றன. மொத்த வீட்டிற்கும் பாதுகாப்பை தராது.












Click it and Unblock the Notifications