சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. ஆனால், இக்கட்சியுடன் இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் திமுக 5 தொகுதிகளை ஒதுக்க முன்வந்திருப்பதாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியிருக்கிறார்.
சற்று முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சிபிஎம் பேச்சுவார்த்தைக் குழு பேசியிருந்தது. இதனையடுத்து என்ன பேசப்பட்டது என்பது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

சிபிஎம் மாநிலகுழு எடுத்த முடிவு
அவர் பேசியதாவது, "இரட்டை இலக்கத்தில் தொகுதியை வலியுறுத்தினோம். நேற்று எங்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாநில குழு கூடி, இந்த விவகாரம் குறித்து விவாதித்திருந்தது. இதில் எங்கள் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி இதில் பங்கேற்றிருந்தார். கட்சியின் மாநில செயற்குழு 2 முறை கூடி, 6 தொகுதிகளுக்கு மேல் வற்புறுத்த வேண்டாம் என்று கூறியது. 6 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
மாநிலகுழு அளித்த அதிகாரம்
எங்களுக்கு மாநிலகுழு அளித்த அதிகாரம் 6-ஐ கேட்டு பெறுவதுதான். ஆனால், கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்திருப்பதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவது சிரமம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரை முதலமைச்சர் நேரடியாக அழைத்து பேசவில்லை. ஆனால் இப்போது நேரில் பேசியிருக்கிறார்.
முதலமைச்சர் சொன்னது என்ன?
முதலமைச்சரை சந்தித்து பேசுகையில், தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இருக்கும் சிக்கலை அவர் கூறியிருந்தார். 5 தொகுதிகளை ஒதுக்க முன்வந்தார். மாநில குழு கூட்டத்தில் பேசிவிட்டு சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். எனவே கட்சியின் மாநில செயற்குழுவில் விவாதித்து உரிய முடிவுகளை அறிவிப்போம். முதலமைச்சரின் அறிவிப்பை ஏற்பதா என்பதை முடிவெடுத்து அறிவிப்போம்.
குறைவான சீட் கொடுத்தாலும், நாங்கள் எதிர்பார்த்த சீட் கிடைத்தாலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் நாங்கள் தொடர்வோம்" என்று பேசியிருக்கிறார்.
சிபிஎம் வைத்த டிமாண்ட்
கடந்த தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் இதில் 2 தொகுதிகளில்தான் கட்சி வெற்றி பெற்றது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், "நாங்கள் வலுவாக இருந்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதுவும் தோல்விக்கு காரணம்தான். கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம். கொடுக்கவில்லை" என்று சண்முகம் கூறியிருந்தார்.
சென்னையில் போட்டி
அதேபோல, சென்னையில் ஏதேனும் தொகுதிகளை கேட்டிருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சண்முகம், "சென்னையும் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது? முதலில் தொகுதிகளின் எண்ணிக்கைய முடிவு செய்வோம். பின்னர் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வோம். இருப்பினும் சென்னையில் போட்டியிட நாங்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
சென்னையில் எந்த தொகுதி?
அதாவது 5 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவாகிவிட்டால், அந்த 5 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதி சென்னைக்குள் இருக்க வேண்டும் என்று சிபிஎம் டிமாண்ட் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த காலங்களில் பெரம்பூர், வில்லிவாக்கம், ஸ்ரீபெரம்புதூர் ஆகிய தொகுதிகளில் சிபிஎம் ஜெயித்திருக்கிறது. எனவே இந்த தேர்தலில் வேளச்சேரி, பெரம்பூர், மதுரவாயல் ஆகிய தொகுதியில் போட்டியிட சிபிஎம் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா?












Click it and Unblock the Notifications