பச்சை பசேலென மாறும் சென்னை IT ஏரியா! சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர்ப்புற வனம்! டெண்டர் கோரிய வனத்துறை
சென்னை: சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ரூ.5 கோடியில் நகர்ப்புற வனம் அமைக்க தமிழ்நாடு வனத்துறை டெண்டர் கோரியுள்ளது. நகர்ப்புற வனத்தில் குளங்கள், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், பூந்தோட்டம் ஆகியவை அமைய உள்ளன. சென்னை மற்றும் புறநகரில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் நகர்ப்புற வனம் அமைய உள்ளது.
நகரங்கள் வளர வளர, மரங்கள் குறைந்து வருகின்றன. நாள்தோறும் அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்களின் பெருக்கம் காரணமாக சுற்றுச்சூழல் அதிகளவில் மாசடைகிறது. இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல. ஐ.டி நிறுவனங்களின் வருகையால் கான்கிரீட் காடாக உருவெடுத்துள்ளது சிறுசேரி. இந்நிலையில், சிறுசேரியில் சிப்காட் அருகிலேயே நகர்ப்புற காடுகளை உருவாக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் வனத்துறை இணைந்து சிறுசேரி சிப்காட் அருகே ராஜிவ்காந்தி சாலை ஓரம் 50 ஏக்கரில் பிரமாண்டமான நகர்ப்புற வனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நகர்ப்புற வனத்தில் குளங்கள், மணல் குன்றுகள், நடைபாதை, சைக்கிள் பாதை, விளக்க மையம், பண்ணைத் தோட்டம், மருத்துவ தோட்டம், குழந்தைகள் விளையாடும் இடம், பூந்தோட்டம் உள்ளிட்டவை அமைய உள்ளன.
சென்னை மற்றும் புறநகரில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் சிறுசேரியில் நகர்ப்புற வனத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நகர்ப்புற வனம் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. தற்போது இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற வனம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், (GFX) சிறுசேரி சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கரில் அமையவுள்ள நகர்ப்புற வனத்தில், குளங்கள், மணல் குன்றுகள், சைக்கிள் பாதை, நடைபாதை, விளக்க மையம், நர்சரி, தோட்டம், அமரும் இடம், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்தவெளி உடற்பயிற்சி இடம், மருத்துவ தாவரங்கள் கொண்ட தோட்டம், பூந்தோட்டம், வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்டவைகள் இடம்பெறவுள்ளன.
சென்னை மற்றும் புறநகரில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் நகர்ப்புற வனத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ள வனத்துறை, இதனை 5 கோடி செலவில் உருவாக்க டெண்டர் கோரியுள்ளது. சிறுசேரி சிப்காட் பகுதியில் நகர்ப்புற வனம் உருவாக்கப்பட உள்ளது ஐ.டி ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிறுசேரி நகரப்புற வனம் அமைப்பதற்கான இ-டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 12 ஆம் தேதி வரை டெண்டர் ஆவணங்களை பதிவிறக்கிக் கொள்ளலாம். டெண்டர் கோருவதற்கான கடைசி நாள் நவம்பர் 12 மாலை 4.30 மணி. விலைப்புள்ளி திறக்கும் நாள்: நவம்பர் 13 மாலை 5 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026












Click it and Unblock the Notifications