தமிழக முழு ஊரடங்கில் அமேசான், பிளிப்கார்ட் செயல்பட முடியாது.. பல சரக்கு, உணவு சப்ளைக்குதான் அனுமதி
சென்னை: தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை உருவாகி உள்ளது.
Recommended Video
செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் மற்றும் பல பொருட்களை இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் டெலிவரி செய்கின்றன.
ஆனால் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி இதை செய்ய முடியாது.

பலசரக்குகள்
ஏனெனில், முழு ஊரடங்கின்போது உணவு வினியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிகம் அதாவது இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன்
இதன்மூலம் இ-காமர்ஸ் நிறுவனங்களில் பொருட்களை ஆர்டர் செய்தவர்களுக்கு அது இப்போதைக்கு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. புதிதாக ஆர்டர் செய்ய முடியாத நிலையும் உருவாகியுள்ளது. அதேநேரம், ஸ்விக்கி, ஜொமோட்டோ, பிக் பாஸ்கெட், இறைச்சி சப்ளை செய்யும் லிசியஸ் போன்ற நிறுவனங்கள் செயல்படலாம்.

செல்போன்கள்
அத்தியாவசியமற்ற சேவைகள் பிரிவின்கீழ் செல்போன் விற்பனை செய்யும் கடைகள் வருகின்றன. எனவே அவை திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாகவும் அவற்றை வாங்க முடியாது என்பதால் அவசர தேவைக்கு மக்கள் அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது.

மறு பரிசீலனை செய்யுமா
ஆன்லைன் மூலமாக பள்ளி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ள இந்த காலகட்டத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு இடையூறாகதான் பார்க்கப்படுகிறது. இதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications