அரசு ஊழியர்கள் " மெகா செக்"? திமுகவை முந்துதா அதிமுக? சிறுபான்மையினர் ஓட்டு எடப்பாடி பழனிசாமிக்கு?
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரப்போகும் நிலையில், அதிமுக, திமுக இரு மெகா கட்சிகளுமே களப்பணியில் இறங்கியிருக்கின்றன.. அந்தவகையில், இந்த முறை அதிக ஓட்டுக்களை பெற போகும் கட்சி எது என்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
திமுகவை பொறுத்தவரை சிறுபான்மையினர் ஓட்டுக்களை தன்னகத்தே வலுவாக வைத்து கொண்டிருக்கிறது.. அதிமுகவை பொறுத்தவரை, பெண்களின் வாக்குகளை தன்னகத்தே வலுவாக வைத்து கொண்டிருக்கிறது. ஆனால், எப்படி பார்த்தாலும், எம்ஜிஆர் காலம் முதலே, திமுகவைவிட, அதிக வாக்கு வங்கியையே பெற்றிருப்பது அதிமுகதான்.
திமுக வெற்றி: எனினும், கடந்த முறை ஆட்சியை தவறவிட்டது.. அதிமுகவை பொறுத்தவரை, 2001ல் வெறும் 31.4 சதவீத ஓட்டுகளுடன் 132 இடங்களில் வென்றுஆட்சியை பிடித்தது.

பிறகு, 2011ல் 38.4 சதவீத ஓட்டுகளுடன், 150 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.. பிறகு, 2016ல், 40.8 சதவீத ஓட்டுகளுடன், 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. 2019 -ல் 18 சதவீத ஓட்டு மட்டுமே பெற்றது என்றாலும், 2021 சட்டசபை தேர்தலில், 34.24 சதவீதமாக உயர்த்திக் காட்டியது.
கூட்டணி: ஆனாலும், ஆட்சியை அதிமுகவால் தக்க வைக்க முடியாமல் போனது.. பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்றார்கள்.. அதேபோல, கூட்டணி விஷயத்தில் திமுக அளவுக்கு., அதிமுக கையாளவில்லை என்றார்கள்..
முக்கியமாக, விஜயகாந்த்தை கூட்டணியில் மிஸ் பண்ணியிருக்க கூடாது என்றும், பாஜக எவ்வளவோ சொல்லியும் எடப்பாடி தரப்பு செவிமடுக்கவில்லை, அமமுகவையாவது கூட்டணியில் சேர்த்திருக்கலாம் என்றும் கருத்துக்கள் வலம் வந்தன. மொத்தத்தில் திமுக அளவுக்கு, அதிமுகவின் கூட்டணி பலமாக இல்லாததே தேர்தல் தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது.
அதிமுக ஓட்டுக்கள்: இந்நிலையில், இழந்துபோன அதிமுகவின் ஓட்டுவங்கியை பெற்றாக வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டி வருகிறார். அதற்காகவே, முதல்காரியமாக, கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டியும் விட்டுள்ளார். ஓவைசி கட்சி, தமீமுன் அன்சாரி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவையும் அதிமுக பெற்றுவருவதை மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவுக்கான வாக்கு வங்கியானது வரும் தேர்தலில், அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சர்கள் சொல்லி வருகிறார்கள். அந்தவகையில், மூத்த அரசியல் விமர்சகர் கலை, ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், வரும் தேர்தலல் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை லிஸ்ட் போட்டு சொல்லி உள்ளார். அதன் சுருக்கம்தான் இது:
மதுரை மாநாடு: "மத்திய அரசு மீது இருக்கும் அதிருப்தி ஓட்டுக்கள், இந்த முறை அதிமுகவுக்குதான் போகுமே தவிர, திமுகவுக்கு போகாது.. இத்தனை காலமும் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்ததால், வெறும் 3 சதவீத வாக்குகள்தான் கிடைத்து வந்தது. ஆனால், இப்போது பாஜகவை விட்டு கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டதால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள்.
ஜனவரி 7ம் தேதி எஸ்டிபிஐ கட்சி மதுரையில் மாநாட்டை நடத்த உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியைதான் சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள்.
கடந்த மாதம் கிறிஸ்தவ கூட்டமைப்பு நடத்திய மாநாட்டிலும், எடப்பாடி பழனிசாமியைதான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அதேபோல, திமுக அரசு மீது அதிருப்தி அடைந்த மைனாரிட்டி கிறிஸ்தவர்களும், அதிமுக பக்கம்தான் போவார்கள். அதேபோல, பாஜகவை விட்டு, அதிமுக வெளியே வந்ததையும் சிறுபான்மையினர் ஆதரிக்கிறார்கள்..
பாஜக? காங்கிரஸ்: இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும்.. பாஜகவா? காங்கிரஸா? என்று சாய்ஸ் வரும்போது, இந்தியா கூட்டணிக்கட்சிக்குதான் சிறுபான்மையினர் ஆதரவு தருவார்கள். ஆனால், இங்கே பாஜக, சாய்ஸிலேயே இல்லை. அதனால், அதிமுக Vs திமுக மட்டும்தான் சாய்ஸாக உள்ளது. எனவே, சிறுபான்மையினர் 2 கட்சிகள் பக்கமும் போகக்கூடும்.
எனினும் தேர்தல் நெருக்கமாக வரும்போது, அதிமுக பக்கம் வர வாய்ப்புள்ளது.. காரணம், மத்தியில் ஆட்சியில் புரிந்த காங்கிரசும், பாஜகவும் இருவருமே நம்மை ஏமாற்றிவிட்டார்கள், என்ற பிரச்சாரத்தை முன்வைப்பார்கள்.. எனவே, தமிழ் உணர்வாளர்கள், தமிழக நலன் என்று சொல்லும்போது, அதிமுக பக்கமே ஆதரவு தருவார்கள்.
அரசு ஊழியர்கள்: இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் இருக்கிறார்கள்.. இந்த ஊழியர்களின் மனைவி, குழந்தைகளை சேர்த்தால், 61 லட்சம் வாக்காளர்கள் வருவார்கள்.. இவர்களில் 45 லட்சம் பேர், கடந்த 2021-ல் திமுகவுக்குதான் ஓட்டுப்போட்டார்கள். அப்படி போட்டும்கூட, வெறும் 3 சதவீதம் வாக்குகள்தான், அதிமுகவைவிட திமுக அதிகமாக பெற முடிந்தது.
மொத்தம் 43 தொகுதிகளில் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக தோற்றுள்ளது. 37 தொகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் குறைவான வித்தியாசத்தில் தோற்றுள்ளது.. இதெல்லாம் சேர்த்து பார்த்தாலே, வெறும் 2 லட்சம் வித்தியாசத்தில்தான் திமுகவிடம் அதிமுகவினர் தோற்றிருக்கிறார்கள்.
வாக்குகள்: தற்சமயம், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுக அரசு அதிருப்தியில் உள்ளனர்.. காரணம், பழைய பென்ஷன் திட்ட வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததால், வருத்தத்தில் உள்ளதால், இதில் பெரும்பாலானோர் அதிமுகவுக்கும் ஓட்டுப்போடலாம்" என்று தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார் மூத்த அரசியல் விமர்சகர் கலை.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications