அரசு ஊழியர்களுக்கு குஷி.. பொங்கல் பரிசு ரூ.1000 "இவங்களுக்கும்" வேணுமாம்.. தமிழக அரசு என்ன சொல்லுமோ?
சென்னை: பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை வழங்குவது துவங்கப்படும் நிலையில், மற்றொரு கோரிக்கை தமிழக அரசுக்கு சென்றுள்ளது.. இது தொடர்பான எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சிரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ரொக்க பணம்: தமிழகத்தில் வழக்கமாகவே, பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணமும் அளிக்கப்பட்டு வரும்நிலையில், இந்த வருடமும் பரிசுத்தொகை அறிவிக்கப்படவில்லையே என்ற ஏக்கம் ஆரம்பத்தில் தென்பட்டது. ஆனாலும், உடனடியாக பொங்கல் பரிசுடன் ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதேசமயம், 4 லட்சம் ரேஷன்தாரர்கள் உட்பட வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் என்று 24 லட்சம் கார்டுதாரருக்கு பரிசு தொகுப்பு கிடைக்காது என்ற தகவல் வெளியானது. இதனால், ஒருதரப்பினர் அதிருப்திக்கு ஆளானார்கள்..
பச்சரிசி: ஆனால், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்குமே தலா, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட உள்ளதாகவும், அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க உள்ளதாகவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அரசு டாக்டர்களும் பொங்கல் பரிசு கேட்டு கோரிக்கை விடுக்க துவங்கி உள்ளனர்.
இதுகுறித்து அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர், எஸ்.பெருமாள் பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். "முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எங்கள் போராட்டத்தில் பங்கேற்றத்துடன், ஆட்சிக்கு வந்தால், ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்து, 2 வருடத்துக்கு மேலாகும் நிலையில், எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை..
ஊதிய உயர்வு: இந்த வருடமாவது, பொங்கல் பரிசாக, எங்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, அரசாணை 354ன்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே, போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஸ்டிரைக் அறிவித்திருக்கிறார்கள்.. மற்றொருபக்கம் பழைய பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் அவ்வப்போது போராட்டம் நடத்தியபடியே வருகிறார்கள்..
எகிறும் எதிர்பார்ப்பு: அதேபோல, 1000 ரூபாய் உரிமைத்தொகை தங்களுக்கு மறுக்கப்படுவதாக, மாற்றுத்திறனாளிகளும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், ஊதிய உயர்வில் அரசு டாக்டர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், அதை பொங்கல் போனஸாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருப்பது, மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications