மாநகராட்சி -நகராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம்! இனி எல்லாம் அதிரடி தான்! தமிழக அரசு அரசாணை!
சென்னை: நிதி ஒதுக்குவதற்கான அதிகாரத்தை உயர்த்தி மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு கூடுதல் பவரை வழங்கியுள்ளது தமிழக அரசு.
இதன் மூலம் இனி நிதி ஒதுக்குவதில் அனுமதி கோரி காத்திருக்கும் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான விவரம் வருமாறு;'

கூடுதல் அதிகாரம்
கூடுதல் அதிகாரம் தொடர்பான அரசாணையை முறைப்படி வெளியிட்டுள்ள தமிழக அரசு, சென்னை மாநகராட்சி தவிர்த்து தமிழகத்தின் ஏனைய அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பொது செலவினங்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்துவதற்கான அதிகாரங்கள் உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருக்க தேவையில்லை
இதன் படி இதுவரை ரூ.35 லட்சம் வரையிலான பணிகளுக்கு மட்டும் நகராட்சி சேர்மன்கள் அனுமதி வழங்கி வந்த நிலையில் இனி ரூ.1 கோடி வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல் நகராட்சிகளில் ரூ.10 கோடி வரையிலான பணிகளுக்கு இயக்குநரே அனுமதி வழங்கலாம் என்றும் ரூ.10 கோடிக்கு மேல் உள்ள பணிகளுக்கும், செயல் திட்டங்களுக்கு மட்டும் அரசின் அனுமதி தேவை எனக் கூறப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கலாம்
நகராட்சி நிர்வாகத்தை போலவே மாநகராட்சி ஆணையரும் ரூ.1 கோடி வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்கலாம் என கூடுதல் அதிகாரம் தரப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.20 லட்சம் வரையிலான பணிகள் மற்றும் செயல்திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி வந்த மேயர்கள் இனி ரூ.50 லட்சம் வரையிலான பணிகளுக்கு தாராளமாக அனுமதி வழங்க முடியும்.

சென்னையை தவிர
நகராட்சியை போலவே மாநகராட்சிகளிலும் ரூ.10 கோடி வரையிலான பணிகளுக்கு இயக்குநரே அனுமதி வழங்கலாம் என்றும் அதற்கு மேல் உள்ள பணிகளுக்கு மட்டும் அரசின் அனுமதி தேவை எனக் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சென்னையை தவிர மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு மட்டும் பொருந்தும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications