தமிழக அரசு ஜாக்பாட்.. "இந்த" ஊழியர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5000 ஆக உயர்வு.. அரசாணை வெளியீடு
சென்னை: ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.. இதுகுறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் அப்போது, பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட அறிவிப்புகளும், புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

புதிய புதிய அறிவிப்புகள்: அந்தவகையில், சட்டப்பேரவை கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மீதான மானிய கோரிக்கையில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டிருந்தார்..
அதாவது, ஊரகப் பகுதிகளில் ரூபாய் ஆயிரம் கோடி செலவில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் 70 லட்சம் மரக்கன்றுகள் ரூபாய் 275 கோடி செலவில் நடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருந்தார்..
அத்துடன், ஊரக பகுதிகளில் பணியாற்றி வரும் சுமார் 66,130 தூய்மை காவலர்களின் மாதாந்திர ஓய்வு மதிப்பூதியம் ரூபாய் 3600ல் இருந்து ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பன உட்பட மொத்தம் 15 அறிவிப்புகளை அமைச்சர் அப்போது அறிவித்திருந்தார். அமைச்சரின் அறிவிப்பு தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.. அவர் அறிவித்தபடியே, தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
அரசாணை: அத்துடன், ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.. மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3600-ல் இருந்து ரூ.5000-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது, தூய்மை காவலர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருத்த நம்பிக்கையையும் தந்து வருகிறது..
நிதி ஒதுக்கீடு: ஏற்கனவே, ஊதிய உயர்வு, மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த நிலையில், தூய்மை காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு இந்த நற்செய்தியை வழங்கியுள்ளது.. இந்த புதிய அறிவிப்பிற்காக தமிழக அரசு 396 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications