Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரந்தூர் ஏர்போர்ட் பணிகளில் ‘ஜரூர்’ காட்டும் தமிழக அரசு.. திட்ட ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க டெண்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு. பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கவும், திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியையும் அரசு கோரியுள்ளது.

சென்னையில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. அதை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இட வசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. சென்னையின் புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது.

parandhur airport chennai

இதற்காக சுமார் 5,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அண்மையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனுக்களை கொடுத்து வருகின்றனர். போராட்டம் நடைபெறும் ஏகனாபுரத்தில் முதல் கட்டமாக 152.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை மொத்தமாக வெளியிடாமல் பகுதி பகுதியாக அரசு வெளியிட்டு வருகிறது. ஏகனாபுரம் கிராமத்தில் 8 பிரிவுகளாக பிரித்து 234 ஏக்கர் நிலம் கையக படுத்தப்படுவதாக அறிவித்தது.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத் பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் அரசு கோரியுள்ளது. இதன்மூலம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+