TNEA 2025: தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை! நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
சென்னை: தமிழகத்தில் 2025- 2026-ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் சேர்க்கைக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகள் தொடங்குகின்றன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இந்த கல்லூரிகளில் ஆண்டுதோறும் 2 லட்சம் பொறியியல், பி.டெக் படிப்பில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தற்போது வரும் 8ஆம் தேதி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்னும் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கவுன்சலிங்கிற்கான விண்ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது. இதை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
நாளை தொடங்கப்படும் இந்த விண்ணப்ப பதிவு ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications