Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு.. முதல்வரின் உத்தரவு யார் யாருக்கு பொருந்தும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். தமிழக அரசு அறிவித்துள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு பொருந்தும்? என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 53 சதவீதமாக உயர்ந்தது. இதனிடையே மத்திய அரசு பாணியில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

tn govt notification dearness allowance government employees

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக, அதற்கான அரசாணையை நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் நேற்று வெளியிட்டு உத்தரவிட்டார்.. அதில் அவர் கூறுகையில், "கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையை, தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும்.

இந்த திருத்தப்பட்ட அகவிலைப்படி, தற்போது அகவிலைப்படியை பெறும் முழு நேர பணியாளர்களுக்கும். சில்லரைச் செலவு நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். பகுதி நேர பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

அதன்படி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்கள்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள்,

ஊதிய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்கள் எழுத்தர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் பொருந்தும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+