Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு! ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு மதுரை மாவட்​டம் அலங்​காநல்​லூர், பாலமேடு மற்​றும் அவனி​யாபுரத்​தில் நடை​பெறும் ஜல்லிக்கட்டுப் போட்​டிகள் உலகப் புகழ்​பெற்​றவை. ஜல்லிக்கட்டு போட்​டிகளின்​போது வாடி​வாசல்​களில் காளை​களை அவிழ்ப்​ப​தையும், அவற்றை வீரர்கள் அடக்குவதையும் ஜல்​லிக்​கட்டு ஆர்​வலர்​கள் பெரு​மை​யாக கருதுகின்​றனர்.

Jallikattu madurai tn government

இந்த ஜல்லிக்கட்டுப் போட்​டிகளைத் தொடர்ந்து தமிழகத்​தின் பிற மாவட்​டங்​களில் போட்​டிகள் நடை​பெறும். அடுத்த மாதம் நடை​பெற இருக்​கும் ஜல்லிக்கட்டுப் போட்​டிகளுக்கு மதுரை, திண்​டுக்​கல், தேனி, சிவகங்​கை, திருச்சி போன்ற தென்​மாவட்​டங்​களில் காளை உரிமை​யாளர்​கள் தங்​கள் காளை​களைத் தயார்​படுத்​தும் பணிகளில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை எங்கும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறை செயலா் சுப்பையன் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.
முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.

விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும்.
காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அதில் தொடா்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரபூா்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்துவது அவசியம்.
போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு தொடா்பு இல்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

இது மட்டுமில்லாமல், வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, மருத்துவக் குழு, மாவட்ட நிா்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, விழாக்குழுவினா், காளை உரிமையாளா்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

போட்டி களத்திலிருந்து காளைகள் வெளியேறும் இடத்தில் கால்நடை மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் இருத்தல் அவசியம்.
தேவைப்படும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அவா்கள் வழங்க வேண்டும்.

போட்டி களத்துக்குள் பாா்வையாளா்களும், வெளி நபா்களும், வீரா்கள் அல்லாத பிறரும் இருக்க அனுமதியில்லை. எனவே இந்த வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற வழிகாட்டு நெறிமுறைகள் மஞ்சு விரட்டு, வடமாடு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். அதனைப் பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும் என்று அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+