ஊர்க்காவல் படைக்கு சங்கம்...தண்டனைக்குரியது...தமிழக அரசு வாதம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊர்க்காவல் படைக்கு சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்க்காவல் படையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சங்கம் தொடங்கியதையடுத்து அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Tamil Nadu government opposes association for home guard in Chennai high court

இதனை எதிர்த்து நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உள்துறை கூடுதல் செயலர் சார்பாக சென்னை மாநகர துணை ஆணையர் பெரோஸ் கான் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஊர்க்காவல் படை என்பது சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாத ஓர் தன்னார்வ அமைப்பு எனவும், தேவையை பொறுத்து அவர்கள் பணிக்கு அழைக்கப்படுவதாகவும், அவர்களுக்கு நாளொன்றுக்கு 560 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

காவல்துறைக்கே சங்கம் வைக்க சட்டப்பூர்வமான அனுமதியில்லை என்கிற போது, காவல்துறை பணிகளை மேற்கொள்ளும் ஊர்க்காவல் படைக்கும் சங்கம் வைக்க அனுமதியில்லை எனவும், அரசின் அனுமதியின்றி சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+