"கிளம்பற நேரத்துல" இறையன்புவுக்கு மகிழ்ச்சி செய்தி.. தமிழக அரசு கலக்கல்.. மனம் குளிரும் வாகன ஓட்டிகள்
சென்னை: தலைமை செயலாளராக பதவி ஓய்வு பெறும்நிலையில், இறையன்பு வைத்த கடைசி கோரிக்கையும் தற்போது நிறைவேறி உள்ளது.. இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு சமீப காலமாகவே, அதிரடியாக அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.. துறை ரீதியான விஷயங்களில் தீவிர கவனத்தையும் மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், பசுமை மயானங்கள் விவகாரத்தையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

பசுமை மயானம்: அந்தவகையில் பசுமை மயானங்களாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு கடந்த வாரம், இதுகுறித்து கடிதம் எழுதியிருந்தார்.
அதேபோல, தங்கும் டிரைவர்களின் நலன்கள் மீது அக்கறை செலுத்தி, அதற்கான உத்தரவையும் சுற்றுலா துறைக்கு இறையன்பு அப்போது பிறப்பித்திருந்தார்.. இது தொடர்பாக, வீட்டு வசதித் துறை செயலர் அபூர்வாவுக்கு, தலைமை செயலர் இறையன்பு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்..
டிரைவர்கள்: அந்த கடிதத்தில், "சுற்றுலாவுக்காக வெளியூர் செல்வோர், ஹோட்டல் அல்லது விடுதியில் அறை எடுத்து தங்குகின்றனர். ஆனால், ஓட்டுனர்களோ ஹோட்டல், விடுதி வளாகம் அல்லது வாகனங்களில் தங்கும் நிலைமையே உள்ளது... இதனால் அவர்களின் தூக்கம் பாதிக்கப்பட்டு, விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. அதனால், அனைத்து ஹோட்டல் மற்றும் விடுதிகளிலும், டிரைவர்கள் குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். அவ்வாறு வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சபாஷ்: விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் வாகன ஓட்டுநர்கள் தங்குவதற்கு கட்டாயம் ஓய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும். இதற்காக சாதாரணமான தொகையை வசூலிக்கலாம். வாகன நிறுத்த கட்டணத்தில் கூட அதை இணைத்து பெறலாம்... அதனால், பெருநகரங்கள், சுற்றுலா பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளின் கட்டுமானத்துக்கு திட்ட அனுமதி கோரும்போது, ஓட்டுநர் தங்கும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு இதுபோல மனிதாபிமானத்துடன் உதவும்போது, விபத்துகளை தவிர்க்கலாம். சாலை பாதுகாப்பு, ஓட்டுநர்கள் நலனில் உங்களது இந்த நடவடிக்கை வரவேற்பை பெறும்" என்று இறையன்பு கேட்டுக் கொண்டிருந்தார்.. டிரைவர்களின் உடல்நிலை குறித்து, மிக மிக நுட்பமாக யோசித்து, அவர்களின் மீதான நலனை வெளிப்படுத்தியிருந்தது, பலரது கவனத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
இப்போது விஷயம் என்னவென்றால், இறையன்பு விடுத்த கோரிக்கையை தமிழக அரசு கருத்தில் கொண்டு, சுற்றுலா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க உத்தரவு அளித்துள்ளது...
சிறப்பு: வாகனங்களில் செல்வோர் தங்குமிடங்களில், ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்றும், அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது... வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் தர இறையன்பு கடிதம் எழுதிய நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் இறையன்பு ஓய்வு பெறும்நிலையில், இந்த உத்தரவு வெளியாகி உள்ளது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications