பதிவுக்கட்டணம் உயர்ந்தது.. "இடி" போல வந்த கட்டண அறிவிப்பு.. அடுக்குமாடி குடியிருப்பு விலையும் உயர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவுக்கட்டணத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. இது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி, அப்பார்ட்மென்ட் ஓனர்களுக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்கனவே கட்டணம் அமலில் உள்ளது.. அந்த பதிவு கட்டணத்துடன், புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டு, அது உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.

கட்டுமான நிறுவனத்திடமிருந்து ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில், குடியிருப்பின் விற்பனை பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை இனி தனியாக பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோல, கட்டுமான ஒப்பந்த கட்டணமாக தனியே 4 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கட்டண உயர்வு: இந்த புதிய கட்டண விகிதங்களை உடனடியாக அமல்படுத்தும் வகையில், அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு, பதிவுத்துறை ஐஜி-க்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பி.ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தியிருக்கிறார்.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணத்தை வசூலிக்கவும், தொடர்ந்து நடந்து வரும் முறைகேடுகளை தடுக்கவும் இத்தகைய தனிப்பதிவுக் கட்டணம் விதிக்கப்படுவதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி விளக்கம் தந்துள்ளார்..
சார் பதிவாளர்கள்: இது குறித்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து சார் பதிவாளர்களுக்கு வழங்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பானது, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது...
உதாரணத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு, ஒரு அப்பார்ட்மென்ட் வாங்க வேண்டியிருந்தால், விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் என தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினாலே இதுவரை போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போதைய தனிப்பதிவு கட்டண உயர்வு காரணமாக, மொத்த விலையில் 9 சதவீத தனிப்பதிவு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும்.
அதிர்ச்சி: அதாவது ரூ.50லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புக்கு 4.5 லட்சம் அளவுக்கு தனி பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டிவரும். அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்தாலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணம் இனி வசூலிக்கப்படுவதுடன், ஆங்காங்கே நடைபெறும் முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications