Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிதூள்.. "தோழி" திட்டத்தை களமிறக்கிய தமிழ்நாடு அரசு.. பெண்களுக்கான சிறப்பான திட்டம்.. என்ன இது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுக்க வேறு மாவட்டங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகளை தொடங்கி உள்ளது தமிழ்நாடு அரசு. தோழி, பணிபுரியும் மகளிர் விடுதிகள் என்ற பெயரில் இந்த விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெண் விடுதலையை உறுதி செய்யும் விதமாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.

Tamil Nadu Government starts Thozhi hostel scheme for women workers

அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

உரிமை தொகை: இது போக தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகையான மகளிருக்கான ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கான முகாம்கள் நடந்து வருகின்றன.

தமிழ்நாடு முழுக்க இதற்கான முகாம்களை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகாம்களில் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முகாம்களில் பின்வரும் சம்பவங்கள் நடக்கின்றன.

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் ஒரு வாரமாக வீடு வீடாக வழங்கப்படுகின்றன.

அதேபோல் இதற்கான டோக்கனும் கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இதற்கான முகாம்கள் தொடங்கி உள்ளன. இப்படி பெண்களின் முன்னேற்றத்திற்கு என்று பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

விடுதிகள்: அதன்படி தமிழ்நாடு முழுக்க வேறு மாவட்டங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகளை தொடங்கி உள்ளது தமிழ்நாடு அரசு. தோழி, பணிபுரியும் மகளிர் விடுதிகள் என்ற பெயரில் இந்த விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி என்ற வரிகளுடன் இந்த விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன.

Tamil Nadu Government starts Thozhi hostel scheme for women workers

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இரண்டு முதல் 4 இடங்களில் இது போன்ற விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. • • • 24*7 பாதுகாப்பு வசதி
• பார்க்கிங் வசதி
• பயோ-மெட்ரிக்
• இலவச WI-FI
• பொழுதுபோக்கு அம்சங்கள்
• அயனிங் வசதி
• கெய்சர் வசதி
* சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி ஆகியவற்றுடன் இந்த விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான மாவட்ட ரீதியான பட்டியலும் அரசு சார்பாக வெளியிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+