Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொழிலாளர் பற்றாக்குறை.. போக்குவரத்துக் கழகங்களில் 2,877 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் போதிய அளவிலான நடத்துனர், ஓட்டுனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2,877 போக்குவரத்து ஊழியர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் கீழ், அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் தனியார் பேருந்து சேவை இல்லாத நிலையில் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

transport department government of tamil nadu chennai

நாள் ஒன்றுக்கு 20,000 மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது.

மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் டிஎன்எஸ்டிசி, எஸ்சிடிசி உள்ளிட்ட போக்குவரத்து கழகங்கள் மூலம் அதிவிரைவு போக்குவரத்து மற்றும் சொகுசு பேருந்து வசதிகளும் செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 2 கோடி மக்கள் இந்த போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் போக்குவரத்து கழகத்தில் போதிய பணியாளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் ஏற்பட்டு இருக்கிறது. தேர்தல் நடைமுறைகள், புதிய பேருந்துகள் வாங்குவது, இலவச திட்டங்கள் வருவாய் இழப்பு, உள்ளிட்டவை காரணமாக தொழிலாளர்கள் நியமனம் தடைப்பட்டது. இதனால் கூடுதல் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து சேவை தடைபடும் சம்பவங்களும் நடைபெற்றன.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 30 லட்சம் முறை பேருந்து சேவை தடைப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 30,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கிறது எனவே அவற்றை நிரப்ப வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 2800 போக்குவரத்து கழக காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஓட்டுனர், நடத்துனர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள், 537 தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 2877 காலி பணியிடங்களை நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அந்த பணிகளில் 37 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணியாளர்களை மொத்தம் 769 காலி பணியிடங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து 2108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 307 டிசிசி 75 தொழில்நுட்ப பணியாளர்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+